search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர் தீப்பிடித்து எரியும் காட்சி
    X
    தேர் தீப்பிடித்து எரியும் காட்சி

    ஆந்திராவில் கோவில் தேர் தீப்பற்றி எரிந்தது- பக்தர்கள் அதிர்ச்சி

    ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கோவில் தேர் நள்ளிரவில் தீப்பற்றி எரிந்தால் பரபரப்பு ஏற்பட்டது.
    அமராவதி:

    ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் அந்தர்வேதியில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான தேர், கோவில் வளாகத்தில் உள்ள கூடாரத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று நள்ளிரவு திடீரென இந்த தேர் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. 

    இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் தேர் முழுவதும் எரிந்து கரிக்கட்டையானது. கோவிலுக்கு சொந்தமான வரலாற்று சிறப்பு மிக்க தேர் எரிந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்.

    அதிகாலை 3 மணிக்கு தீ அணைக்கப்பட்டதாகவும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். தேருக்கு விஷமிகள் யாராவது தீ வைத்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. 
    Next Story
    ×