search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்
    X
    சுப்ரீம் கோர்ட்

    ‘நீட்’ தேர்வுக்கு எதிராக 6 மாநிலங்கள் மறு ஆய்வு மனு - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

    ‘நீட்’ தேர்வுக்கு எதிராக 6 மாநிலங்கள் மறு ஆய்வு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணை நடத்துகிறது.
    புதுடெல்லி:

    மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்காக ‘நீட்’ மற்றும் ‘ஜே.இ.இ.’ தேர்வுகளை நடத்த அனுமதித்து கடந்த மாதம் 17-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

    அதன்படி ‘நீட்’ தேர்வு வரும் 13-ந்தேதி நடக்கிறது. ‘ஜே.இ.இ.’ தேர்வு கடந்த 1-ந்தேதி தொடங்கியது. 6-ந்தேதி முடிகிறது.

    இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறு ஆய்வு செய்யுமாறு கோரி எதிர்க்கட்சிகள் ஆளுகிற மேற்கு வங்காளம், ஜார்கண்ட், ராஜஸ்தான், சத்தீ‌‌ஷ்கார், பஞ்சாப், மராட்டியம் ஆகிய 6 மாநிலங்களின் மந்திரிகள் மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    அந்த மனுவில், ‘‘கொரோனா காலத்தில் மாணவர்கள் வாழ்வதற்கான உரிமையை சுப்ரீம் கோர்ட்டு பாதுகாக்க தவறி விட்டது, தேர்வுகளை நடத்துவதில் உள்ள சிக்கல்களை புறக்கணித்து விட்டது’’ என கூறப்பட்டுள்ளது.

    இந்த மறு ஆய்வு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அசோக் பூ‌‌ஷண், பி.ஆர்.கவாய், கிரு‌‌ஷ்ண முராரி ஆகியோரை கொண்ட அமர்வு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணை நடத்துகிறது.

    வழக்கம்போலவே இந்த மறு ஆய்வு மனுவும் நீதிபதிகள் அறையிலேயே விசாரணைக்கு வரும். அப்போது இந்த மறு ஆய்வு மனு, திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்க தகுதியானதுதானா என நீதிபதிகள் அறையிலேயே முடிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×