என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னை மினி பாகிஸ்தானாக மாறுவதாக வைரலாகும் பகீர் புகைப்படம்
Byமாலை மலர்2 Sep 2020 5:07 AM GMT (Updated: 4 Sep 2020 5:19 AM GMT)
சென்னை மினி பாகிஸ்தானாக மாறி வருவதாக கூறி பகீர் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இரத்தம் சிந்திய காவல் துறை சீருடை மற்றும் காயமுற்ற நபரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் புகைப்படத்தில் இருப்பது பெண்களை காப்பாற்ற முயன்ற தமிழக காவல் துறை அதிகாரி என்றும் இவர் முஸ்லிம் நபர்களால் தாக்கப்பட்டார் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.
ட்விட்டரில் வலம் வரும் தகவல்களில், சென்னை மினி பாகிஸ்தானாக மாறி வருகிறது. துணை ஆய்வாளர் அகிலன் பெண்களை ஆபத்தில் இருந்து காப்பாற்ற முயன்ற போது போதை பொருள் உட்கொண்டிருந்த மூன்று முஸ்லிம் நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டார் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், அந்த புகைப்படங்கள் 2017 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டவை என தெரியவந்துள்ளது. மேலும் புகைப்படத்தில் இருப்பவர் போலீஸ் கான்ஸ்டபிள் என்பதும் அவரை தாக்கியவர்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
உண்மையில், சென்னை மெரினா கடற்கரையில் மது அருந்திய நபர்களை போலீஸ் கான்ஸ்டபிள் அங்கிருந்து வெளியேற கூறினார். இதனால் ஆத்திரமடைந்தவர்கள் போலீஸ் அதிகாரியை தாக்கினர். இந்த சம்பவம் செய்தியாகவும் வெளியாகி இருக்கிறது.
அந்த வகையில் வைரல் தகவல்களில் உள்ளது போன்று போலீஸ் அதிகாரியை முஸ்லிம் நபர்கள் தாக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X