என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாராளுமன்ற கூட்டத்தொடர் 14-ந் தேதி தொடக்கம் - விடுமுறை இன்றி நடைபெறும்
Byமாலை மலர்31 Aug 2020 7:40 PM GMT (Updated: 1 Sep 2020 12:00 AM GMT)
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 14-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ந் தேதி வரை நடக்கிறது.
புதுடெல்லி:
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வழக்கமாக ஜூலை இறுதியில் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு, நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், இந்த தொடர் தள்ளிப்போனது. எனினும் பட்ஜெட் தொடர் முடிந்து சுமார் 6 மாதங்கள் ஆகும் நிலையில் மழைக்கால தொடரை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி வருகிற 14-ந் தேதி முதல் இந்த தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக நேற்று மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த தொடர் அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ந் தேதி வரை நடத்தப்படும் என அதில் கூறப்பட்டு உள்ளது. இதில் எந்த விடுமுறையோ, வார விடுமுறையோ இன்றி தொடர்ச்சியாக 18 அமர்வுகள் நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
கொரோனா அச்சுறுத்தலில் இருந்து உறுப்பினர்களை பாதுகாப்பதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக சமூக இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இரு அவைகளின் அறைகள் மட்டுமின்றி பார்வையாளர் மாடங்களிலும் உறுப்பினர்கள் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
மேலும் அனைத்து உறுப்பினர்களும் அவை நிகழ்வுகளில் பங்கேற்க வசதியாக பிரமாண்ட திரைகள், சிறப்பு ஒலி அமைப்புகள் என பல்வேறு முதல் முறை நிகழ்வுகள் தயாராகி வருகின்றன. கூட்டம் கூடுவதை தவிர்க்க அதிகாரிகள், ஊடகத்தினருக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிகிறது.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வழக்கமாக ஜூலை இறுதியில் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு, நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், இந்த தொடர் தள்ளிப்போனது. எனினும் பட்ஜெட் தொடர் முடிந்து சுமார் 6 மாதங்கள் ஆகும் நிலையில் மழைக்கால தொடரை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி வருகிற 14-ந் தேதி முதல் இந்த தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக நேற்று மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த தொடர் அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ந் தேதி வரை நடத்தப்படும் என அதில் கூறப்பட்டு உள்ளது. இதில் எந்த விடுமுறையோ, வார விடுமுறையோ இன்றி தொடர்ச்சியாக 18 அமர்வுகள் நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
கொரோனா அச்சுறுத்தலில் இருந்து உறுப்பினர்களை பாதுகாப்பதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக சமூக இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இரு அவைகளின் அறைகள் மட்டுமின்றி பார்வையாளர் மாடங்களிலும் உறுப்பினர்கள் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
மேலும் அனைத்து உறுப்பினர்களும் அவை நிகழ்வுகளில் பங்கேற்க வசதியாக பிரமாண்ட திரைகள், சிறப்பு ஒலி அமைப்புகள் என பல்வேறு முதல் முறை நிகழ்வுகள் தயாராகி வருகின்றன. கூட்டம் கூடுவதை தவிர்க்க அதிகாரிகள், ஊடகத்தினருக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X