என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பொருள்களை வழங்கினார் சிவராஜ் சிங் சவுகான்
Byமாலை மலர்31 Aug 2020 10:07 AM GMT (Updated: 31 Aug 2020 10:07 AM GMT)
மத்திய பிரதேசத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அங்குள்ள மக்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கினார்.
போபால்:
மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.
மழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின், பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலத்தில் வெள்ளம் பாதித்த ஹோசங்காபாத் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் படகு மூலம் சென்று பார்வையிட்டார். அப்போது அங்குள்ள மக்களுக்கு நிவாரண பொருள்களையும் வழங்கினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X