search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிவாரண பொருள் வழங்கும் சிவராஜ் சிங் சவுகான்
    X
    நிவாரண பொருள் வழங்கும் சிவராஜ் சிங் சவுகான்

    வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பொருள்களை வழங்கினார் சிவராஜ் சிங் சவுகான்

    மத்திய பிரதேசத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அங்குள்ள மக்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கினார்.
    போபால்:

    மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். 

    மழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின், பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார். 

    இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலத்தில் வெள்ளம் பாதித்த ஹோசங்காபாத் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் படகு மூலம் சென்று பார்வையிட்டார். அப்போது அங்குள்ள மக்களுக்கு நிவாரண பொருள்களையும் வழங்கினார்.
    Next Story
    ×