search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
    X
    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

    காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல்

    காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் (70), உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார்.  கொரோனா பாதிப்பு காரணமாக வசந்தகுமாருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று இரவு 7 மணியளவில் அவர் மரணம் அடைந்தார்.

    காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், எம்.பி. வசந்தகுமார் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அரசியலிலும், வர்த்தக உலகிலும் தனது பெயரை நிலைநாட்டியவர் வசந்தகுமார். இந்த நேரத்தில் எம்.பி. வசந்தகுமாரின் குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×