search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரபேல் போர் விமானம்
    X
    ரபேல் போர் விமானம்

    செப் 10ஆம் தேதி ரபேல் போர் விமான இணைப்பு விழா - முறைப்படி இந்திய விமானப்படையில் இணைக்கப்படுகிறது

    செப்டம்பர் 10ஆம் தேதி ரபேல் போர் விமான இணைப்பு விழா நடைபெற உள்ளது. அதில் ரபேல் போர் விமானம் முறைப்படி இந்திய விமானப்படையில் இணைக்கப்படுகிறது.
    புதுடெல்லி:

    இந்திய விமானப்படைக்கு பிரான்சில் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக கடந்த 2016-ம் ஆண்டு இரு நாட்டு அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ரூ.59 ஆயிரம் கோடிக்கு வாங்கப்படும் இந்த விமானங்களை பிரான்சின் டசால்ட் நிறுவனம் தயாரித்து வழங்கும்.

    தாக்குதல் ரகத்தை சேர்ந்த இந்த 36 விமானங்களில் 6 விமானங்கள் பயிற்சி விமானங்கள் ஆகும். அவற்றிலும் பிற விமானங்களில் இருப்பதுபோன்ற அனைத்து அம்சங்களும் இருக்கும். 

    ஒப்பந்தபடி, பிரான்ஸ் முதல் கட்டமாக ஐந்து விமானங்களை இந்தியாவிடம் ஒப்படைத்தது. இவை கடந்த ஜூலை 29-ல் இந்தியா வந்து சேர்ந்தன. 

    இந்நிலையில் ரபேல் போர் விமானம் முறைப்படி இந்திய விமானப்படையில் இணைக்கப்படும் விழா வரும் 10ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ரபேல் போர் விமான இணைப்பு விழா ஹரியானா மாநிலம் அப்பாலா விமானப்படை தளத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று, விமானங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த விழாவில் பங்கேற்க பிரான்ஸ் ராணுவத்துறை அமைச்சருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×