search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிர்மலா சீதாராமன்
    X
    நிர்மலா சீதாராமன்

    கொரோனா பாதிப்பு கடவுளின் செயல் - நிர்மலா சீதாராமன் கருத்து

    கொரோனா பாதிப்பை கடவுளின் செயல் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்
    புதுடெல்லி:

    ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் முடிந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், கொரோனா பாதிப்பை கடவுளின் செயல் என்று குறிப்பிட்டார். கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டில் ஜி.எஸ்.டி. வசூல் வெகுவாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதற்கு முன் எப்போதும் இல்லாத அபூர்வமான சூழ்நிலை ஏற்பட்டு உருவாகி இருப்பதாகவும் கூறினார்.

    இந்த நிதி ஆண்டில் ஜி.எஸ்.டி. இழப்பீடாக மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் கோடி வழங்கி இருப்பதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×