search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்தா பானர்ஜி
    X
    மம்தா பானர்ஜி

    மேற்கு வங்காளத்தில் செப்டம்பர் 20 வரை ஊரடங்கு நீட்டிப்பு - மம்தா பானர்ஜி

    மேற்கு வங்காளத்தில் செப்டம்பர் 20ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது என முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
    கொல்கத்தா:

    இந்தியாவில் ஜூன் மாதத்தில் இருந்து ‘அன்லாக்’ என்ற முறையில் ஒவ்வொரு கட்டமாக தளர்வு அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.

    ஆனால் கொரோனா தொற்றால் பெரும்பாலான மாநிலங்களின் குறிப்பிட்ட பகுதியில் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ‘அன்லாக் 4’ குறித்து மத்திய அரசு இன்னும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடவில்லை.

    இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் செப்டம்பர் 20ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    செப்டம்பர் 7, 11, 12 ஆகிய தேதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×