என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராகுல்காந்தி தவறு செய்துவிட்டார்: நடிகை ரம்யா டுவிட்டர் பதிவு
Byமாலை மலர்25 Aug 2020 3:37 AM GMT (Updated: 25 Aug 2020 3:37 AM GMT)
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலருக்கு பா.ஜனதாவுடன் தொடர்பு இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் ராகுல்காந்தி தவறு செய்து விட்டார் என்றும் நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான ரம்யா கருத்து தெரிவித்துள்ளார்.
பெங்களூரு :
அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல்காந்தி, சோனியா காந்திக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராஜினாமா செய்யும்படி அழுத்தம் கொடுப்பதாகவும், மூத்த தலைவர்கள் சிலருக்கு பா.ஜனதாவுடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டியதாக தகவல்கள் வெளியாகின. அதே நேரத்தில் சோனியா காந்திக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் எழுதிய கடிதமும் இணையதளத்தில் வெளியாகின. இதுகுறித்து நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான ரம்யா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் எழுதிய கடிதம் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இதுபோல காரிய கமிட்டி கூட்டத்தில் நடந்த ஆலோசனை குறித்தும் நிமிடத்திற்கு ஒரு முறை தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. இதனால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பா.ஜனதாவுடன் தொடர்பில் இருப்பதாக கருதுகிறேன். இந்த விவகாரத்தில் ராகுல்காந்தி தவறு செய்து விட்டார் என்று நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல்காந்தி, சோனியா காந்திக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராஜினாமா செய்யும்படி அழுத்தம் கொடுப்பதாகவும், மூத்த தலைவர்கள் சிலருக்கு பா.ஜனதாவுடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டியதாக தகவல்கள் வெளியாகின. அதே நேரத்தில் சோனியா காந்திக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் எழுதிய கடிதமும் இணையதளத்தில் வெளியாகின. இதுகுறித்து நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான ரம்யா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் எழுதிய கடிதம் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இதுபோல காரிய கமிட்டி கூட்டத்தில் நடந்த ஆலோசனை குறித்தும் நிமிடத்திற்கு ஒரு முறை தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. இதனால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பா.ஜனதாவுடன் தொடர்பில் இருப்பதாக கருதுகிறேன். இந்த விவகாரத்தில் ராகுல்காந்தி தவறு செய்து விட்டார் என்று நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X