என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊரடங்கு காலத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பா?
Byமாலை மலர்24 Aug 2020 6:29 PM GMT (Updated: 24 Aug 2020 6:29 PM GMT)
ஊரடங்கு காலத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்று தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
நாட்டின் குழந்தை உரிமைகளுக்கான உயரிய அமைப்பான தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங் கனூங்கோ, ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
கொரோனாவாலும், ஊரடங்காலும் குழந்தைகள் சந்தித்த சவால்களுக்கு தீர்வு காண எங்கள் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தது.
ஊரடங்கு காலத்தில், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. அப்படி அதிகரித்ததாக செய்திகள்தான் வெளியாகின.
கொரோனா பிரச்சினையால் படிப்பை பாதியில் நிறுத்தும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று சிலர் கூறுகிறார்கள். இன்னும் பள்ளிக்கூடமே திறக்காத நிலையில், அப்படி சொல்வது சரியல்ல.
எத்தனையோ கடினமான தருணங்களில், குழந்தைகள் பள்ளிக்கு சென்று, தங்கள் தேசிய கடமையை ஆற்றி வருகிறார்கள். எனவே, அவர்களை பற்றி எதிர்மறையான அணுகுமுறை கொண்டிருப்பது நியாயமல்ல.
ஊரடங்கையொட்டி, புலம்பெயர் தொழிலாளர்கள் இடம்பெயர்ந்தபோது, குழந்தைகளுக்கு தங்கும் இடங்களை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளை வலியுறுத்தினோம். குழந்தைகளுக்கு பால் உள்ளிட்ட பொருட்களை வழங்கினோம். ஆன்லைன் கல்வி, கல்வி கட்டணம் தொடர்பான பிரச்சினைகளையும் மாநில அரசுகளுக்கு எடுத்துச் சென்றுள்ளோம். குழந்தைகள் கடத்தப்படுவதற்கு முக்கிய காரணம், வறுமை. எனவே, பெற்றோரின் வறுமையை ஒழிக்க அந்த குடும்பத்துக்கு மறுவாழ்வு அளிப்பது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.
நாட்டின் குழந்தை உரிமைகளுக்கான உயரிய அமைப்பான தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங் கனூங்கோ, ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
கொரோனாவாலும், ஊரடங்காலும் குழந்தைகள் சந்தித்த சவால்களுக்கு தீர்வு காண எங்கள் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தது.
ஊரடங்கு காலத்தில், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. அப்படி அதிகரித்ததாக செய்திகள்தான் வெளியாகின.
கொரோனா பிரச்சினையால் படிப்பை பாதியில் நிறுத்தும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று சிலர் கூறுகிறார்கள். இன்னும் பள்ளிக்கூடமே திறக்காத நிலையில், அப்படி சொல்வது சரியல்ல.
எத்தனையோ கடினமான தருணங்களில், குழந்தைகள் பள்ளிக்கு சென்று, தங்கள் தேசிய கடமையை ஆற்றி வருகிறார்கள். எனவே, அவர்களை பற்றி எதிர்மறையான அணுகுமுறை கொண்டிருப்பது நியாயமல்ல.
ஊரடங்கையொட்டி, புலம்பெயர் தொழிலாளர்கள் இடம்பெயர்ந்தபோது, குழந்தைகளுக்கு தங்கும் இடங்களை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளை வலியுறுத்தினோம். குழந்தைகளுக்கு பால் உள்ளிட்ட பொருட்களை வழங்கினோம். ஆன்லைன் கல்வி, கல்வி கட்டணம் தொடர்பான பிரச்சினைகளையும் மாநில அரசுகளுக்கு எடுத்துச் சென்றுள்ளோம். குழந்தைகள் கடத்தப்படுவதற்கு முக்கிய காரணம், வறுமை. எனவே, பெற்றோரின் வறுமையை ஒழிக்க அந்த குடும்பத்துக்கு மறுவாழ்வு அளிப்பது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X