என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பீட்சா ஆர்டர் செய்த பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.44 ஆயிரம் அபேஸ்
Byமாலை மலர்24 Aug 2020 3:32 AM GMT (Updated: 24 Aug 2020 3:32 AM GMT)
பீட்சா ஆர்டர் செய்த பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.44 ஆயிரம் அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
வசாய் :
பால்கர் மாவட்டம் வசாயை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர், சம்பவத்தன்று பீட்சா வாங்க ஆன்லைனில் ஆர்டர் செய்தார். இதற்காக தனது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.359-ஐ பரிமாற்றம் செய்தார். இந்தநிலையில் வெகுநேரமாகியும் பீட்சா வராததால் ஆன்லைனில் இருந்த எண்ணை தொடர்புகொண்டு விசாரித்தார். அப்போது, மறுமுனையில் பேசிய நபர் தன்னை தீபக் சர்மா என்று அறிமுகப்படுத்திக்கொண்டு அந்த பெண்ணிடம் தொழிற்நுட்ப கோளாறு காரணமாக உங்களது ஆர்டர் எங்களுக்கு வந்து சேரவில்லை.
எனவே நீங்கள் செலுத்திய பணம் உங்களுக்கு சில தினங்களில் வந்துவிடும் என கூறி வங்கி கணக்கு விவரங்களை கேட்டுவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
இதன்பின்னர் சில மணி நேரத்தில் அப்பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து தொடர்ச்சியாக ரூ.43 ஆயிரத்து 900 மற்றொரு வங்கிக்கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் மாணிக்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, நூதன முறையில் பெண்ணின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை அபேஸ் செய்த மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி அவரை தேடிவருகின்றனர்.
பால்கர் மாவட்டம் வசாயை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர், சம்பவத்தன்று பீட்சா வாங்க ஆன்லைனில் ஆர்டர் செய்தார். இதற்காக தனது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.359-ஐ பரிமாற்றம் செய்தார். இந்தநிலையில் வெகுநேரமாகியும் பீட்சா வராததால் ஆன்லைனில் இருந்த எண்ணை தொடர்புகொண்டு விசாரித்தார். அப்போது, மறுமுனையில் பேசிய நபர் தன்னை தீபக் சர்மா என்று அறிமுகப்படுத்திக்கொண்டு அந்த பெண்ணிடம் தொழிற்நுட்ப கோளாறு காரணமாக உங்களது ஆர்டர் எங்களுக்கு வந்து சேரவில்லை.
எனவே நீங்கள் செலுத்திய பணம் உங்களுக்கு சில தினங்களில் வந்துவிடும் என கூறி வங்கி கணக்கு விவரங்களை கேட்டுவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
இதன்பின்னர் சில மணி நேரத்தில் அப்பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து தொடர்ச்சியாக ரூ.43 ஆயிரத்து 900 மற்றொரு வங்கிக்கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் மாணிக்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, நூதன முறையில் பெண்ணின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை அபேஸ் செய்த மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி அவரை தேடிவருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X