search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பிரபுராம் சவுத்ரி
    X
    மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பிரபுராம் சவுத்ரி

    மத்திய பிரதேசத்தில் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி

    மத்திய பிரதேசத்தில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பிரபுராம் சவுத்ரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

    இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் சுகாதாரத்துறை மந்திரி  பிரபுராம் சவுத்ரிக்கு, கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,  எனக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியாகி உள்ளது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தி கொள்ளுங்கள். மக்கள் சேவையாற்ற உங்கள் பிரார்த்தனைகளுடன் மீண்டு வருவேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    மத்தியப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் தவிர்த்து 7 ஆவது அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மத்திய பிரதேசத்தில் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், அமைச்சர்கள் கோபால் பார்கவா, விஸ்வாஸ் சாரங், அரவிந்த் பதோரியா, துளசிராம் சிலாவத், மோகன் யாதவ், ரம்கேலவன் படேல் ஆகியேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. 
    Next Story
    ×