என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லி ஐ.எஸ். பயங்கரவாதி இந்தியாவில் தாக்குதல்களை நடத்த திட்டம்- திடுக்கிடும் தகவல்
Byமாலை மலர்22 Aug 2020 8:29 AM GMT (Updated: 22 Aug 2020 8:29 AM GMT)
டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்த ஐ.எஸ். பயங்கரவாதி இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
புதுடெல்லி:
டெல்லியில் தவுலா குவானில் போலீசாருடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட நபரை டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது என டெல்லி துணை போலீஸ் கமிஷனர் பிரமோத் சிங் குஷ்வாஹா தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட பயங்கரவாதியிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
30 வயதுடைய அந்நபரிடம் இருந்து சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள், துப்பாக்கி, வெடிக்காத தோட்டாக்கள் ஆகியவற்றை டெல்லி போலீசார் கைப்பற்றினர். பிரஷர் குக்கரில் வைக்கப்பட்டு இருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பின்பு, ரிட்ஜ் சாலையில் உள்ள புத்த ஜெயந்தி பூங்காவில் வைத்து செயலிழக்க செய்யப்பட்டது.
போலீசாரின் விசாரணையில் வெவ்வேறு முரண்பட்ட தகவல்களை அவர் கூறியுள்ளார். பின்னர், ஆப்கானிஸ்தான் நாட்டின் கோரசான் மாகாணத்தில் உள்ள ஐ.எஸ். தளபதிகளிடம் பயிற்சி பெற்றது தெரிய வந்துள்ளது. இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த அவர்கள் திட்டமிட்டு இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கோரசான் மாகாணத்தில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் இணையளதளம் வழியாகவும் அந்த நபர் தொடர்பில் இருந்துள்ளார்.
காஷ்மீரில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகளுடனும் அந்நபர் தொடர்பில் இருந்துள்ள திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை தொடர்ந்து உத்தர பிரதேசத்தில் உள்ள அவரது சொந்த ஊரான பலராம்பூருக்கு கொண்டு சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X