search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடிகர் சுஷாந்த் சிங், பர்த் பவார்
    X
    நடிகர் சுஷாந்த் சிங், பர்த் பவார்

    சுஷாந்த் சிங் வழக்கில் சி.பி.ஐ. விசாரணை: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வரவேற்ற பர்த்பவார்

    சுஷாந்த் சிங் வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை வரவேற்ற பர்த்பவார் ‘வாய்மையே வெல்லும்’ என்று பதிவிட்டு இருப்பது அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மும்பை :

    இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் பேரன் பர்த்பவார் வலியுறுத்தி இருந்தார். துணை முதல்-மந்திரி அஜித்பவாரின் மகனான இவரது கோரிக்கை, மராட்டிய கூட்டணி அரசின் முடிவுக்கு எதிராக இருந்ததால், சரத்பவார் குடும்பத்தில் கருத்து வேறுபாடு எழுந்ததாக தகவல் வெளியானது.

    இந்தநிலையில் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை பீகார் மாநில அரசின் கோரிக்கையை ஏற்று சி.பி.ஐ. விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.

    இந்த தீர்ப்பு வெளியான உடன், ‘வாய்மையே வெல்லும்’ என்று பர்த் பவார் தனது வலைத்தள பக்கத்தில் பதிவிட்டார். ஆனால் அவர் எந்த வழக்கையும் குறிப்பிட்டு இந்த பதிவை செய்யவில்லை. ஆனாலும் சுஷாந்த் சிங் வழக்கில் தீர்ப்பு வெளியான உடன் அவர் பதிவிட்டு இருப்பது அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×