search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்
    X
    காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்

    மணிப்பூரில் 5 காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் இணைந்தனர்

    மணிப்பூரில் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 5 பேரும் மந்திரி பிரேன் சிங் முன்னிலையில் பாரதீய ஜனதாவில் இணைந்தனர்.
    புதுடெல்லி:

    மணிப்பூரில் முதல்-மந்திரி பிரேன் சிங் தலைமையில் பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணி அரசுக்கு எதிராக காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது கடந்த 10-ந் தேதி வாக்கெடுப்பு நடந்தது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று பிரேன் சிங் ஆட்சியை தக்க வைத்தார்.

    இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முன்னாள் முதல்-மந்திரி இபோபி சிங்கின் மருமகன் ஹென்றி ஒக்ராம், பனோனாம் பிரோக்கன், ஒய்னாம் லுகோய் சிங், காம்தாங் ஹோகிப், கின்சுயான்ஹா சவு ஆகிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் பங்கேற்கவில்லை. பின்னர் திடீரென அவர்கள் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். கட்சியில் இருந்தும் விலகினர்.

    இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 5 பேரும் நேற்று முதல் மந்திரி பிரேன் சிங் முன்னிலையில் பாரதீய ஜனதாவில் இணைந்தனர்.

    Next Story
    ×