என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆந்திராவில் சிறிய வீட்டில் பெட்டி பெட்டியாக பதுக்கப்பட்டு இருந்த தங்கம், வெள்ளி பறிமுதல்
Byமாலை மலர்19 Aug 2020 5:51 PM GMT (Updated: 19 Aug 2020 5:51 PM GMT)
ஆந்திராவில் சிறிய வீட்டில் பெட்டி பெட்டியாக பதுக்கப்பட்டு இருந்த தங்கம், வெள்ளியை போலீசார் பறிமுதல் செய்தனர்
விசாகபட்டினம்:
ஆந்திராவில் அனந்தபுரம் மாவட்டத்தில் புங்கராசமுத்திரம் கிராமத்தில் தகரசீட் போடப்பட்ட சிறிய வீடு ஒன்றில் பாதுகாக்கப்பட்ட 8 இரும்பு பெட்டிகளில் இரண்டரை கிலோ தங்கம், 80 கிலோ வெள்ளி மற்றும் 15 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சிறிய வீட்டில் இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் விலை உயர்ந்த கார்களையும், கை துப்பாக்கி ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து 50 கோடி ரூபாய் மதிப்புள்ள வங்கி முதலீட்டு பத்திரங்களும் சிக்கியுள்ளன. அந்த வீட்டில் வசித்து வந்த பாலாய்யா என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தமக்கும் இந்த இரும்பு பெட்டிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ளார்.
தனது மருமகன் மனோஜ் என்பவரிடம் ஓட்டுநராக பணி செய்வதாகவும், மனோஜ் கொடுக்கும் பெட்டிகளை வீட்டில் கொண்டு வைத்திருப்பதாகவும் பாலாய்யா கூறியுள்ளார். அரசு கருவூலத்தில் பணியாற்றும் மனோஜ் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். ரியல் எஸ்டேட் தொழில் செய்ய 10 அடியாட்கள் வைத்து பராமரித்து வருவது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து, இரும்பு பெட்டியில் சிக்கிய தங்கம், வெள்ளி, நகைகள் மனோஜுக்கு சொந்தமானதா? இதில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் மற்றும் வருமான வரித்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆந்திராவில் அனந்தபுரம் மாவட்டத்தில் புங்கராசமுத்திரம் கிராமத்தில் தகரசீட் போடப்பட்ட சிறிய வீடு ஒன்றில் பாதுகாக்கப்பட்ட 8 இரும்பு பெட்டிகளில் இரண்டரை கிலோ தங்கம், 80 கிலோ வெள்ளி மற்றும் 15 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சிறிய வீட்டில் இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் விலை உயர்ந்த கார்களையும், கை துப்பாக்கி ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து 50 கோடி ரூபாய் மதிப்புள்ள வங்கி முதலீட்டு பத்திரங்களும் சிக்கியுள்ளன. அந்த வீட்டில் வசித்து வந்த பாலாய்யா என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தமக்கும் இந்த இரும்பு பெட்டிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ளார்.
தனது மருமகன் மனோஜ் என்பவரிடம் ஓட்டுநராக பணி செய்வதாகவும், மனோஜ் கொடுக்கும் பெட்டிகளை வீட்டில் கொண்டு வைத்திருப்பதாகவும் பாலாய்யா கூறியுள்ளார். அரசு கருவூலத்தில் பணியாற்றும் மனோஜ் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். ரியல் எஸ்டேட் தொழில் செய்ய 10 அடியாட்கள் வைத்து பராமரித்து வருவது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து, இரும்பு பெட்டியில் சிக்கிய தங்கம், வெள்ளி, நகைகள் மனோஜுக்கு சொந்தமானதா? இதில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் மற்றும் வருமான வரித்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X