என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நான் டாக்டர்களை அவமதிக்கவில்லை- சஞ்சய் ராவத் விளக்கம்
Byமாலை மலர்18 Aug 2020 9:57 AM GMT (Updated: 18 Aug 2020 9:57 AM GMT)
உலக சுகாதார அமைப்பு தனது வேலையைச் சரியாகச் செய்திருந்தால், கொரோனா தொற்றுநோய் உலகம் முழுவதும் பரவியிருக்காது என்று சஞ்சய் ராவத் குற்றம்சாட்டியுள்ளார்.
மும்பை:
சிவசேனா மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான சஞ்சய் ராவத் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது, கொரோனா பரவலுக்கு உலக சுகாதார அமைப்பு தான் காரணம் என்று குற்றம்சாட்டினார். மேலும் டாக்டர்களை விட கம்பவுண்டருக்கு அதிகம் தெரியும் என்று அவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விமர்சனத்துக்காக அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று டாக்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுபற்றி இன்று விளக்கம் அளித்துள்ள சஞ்சய் ராவத், டாக்டர்களை அவமதிக்கவில்லை என்றும், உலக சுகாதார நிறுவனத்தின் பங்களிப்பு பற்றி பேசியதாகவும் கூறினார்.
‘நான் யாரையும் அவமதிக்கவில்லை. குறிப்பாக மருத்துவர்களை அவமதிக்க முடியாது. நான் உட்பட எவரும், மருத்துவப் பணியில் உள்ள மருத்துவர்களையும் மற்றவர்களையும் ஒருபோதும் அவமதிக்க முடியாது. குறிப்பாக கொரோனா தொற்றுநோய்களின் போது அவர்கள் செய்த பங்களிப்புக்குப் பிறகு யாரும் அவர்களை அவமதிக்க முடியாது.
இந்த கொரோனா காலகட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், வார்டுபாய்கள் நிறைய பங்களிப்பு செய்துள்ளனர்.
நெருக்கடியாக காலகட்டத்தின் போது உலக சுகாதார அமைப்பின் பங்களிப்பு பற்றி பேசியிருந்தேன். இதையே பலரும் கூறி உள்ளனர். எனது இந்த கருத்து சிலரால் தேவையின்றி அரசியல்மயமாக்கப்பட்டு வருகிறது.
உலக சுகாதார அமைப்பு தனது வேலையைச் சரியாகச் செய்திருந்தால், கொரோனா தொற்றுநோய் உலகம் முழுவதும் பரவியிருக்காது’ என்று சஞ்சய் ராவத் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X