என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீன படையை எதிர்த்து நள்ளிரவில் 20 மணிநேரம் போரிட்டோம் - இந்தோ திபெத்திய எல்லை காவல் படை
Byமாலை மலர்15 Aug 2020 12:32 AM GMT (Updated: 15 Aug 2020 12:32 AM GMT)
சீன படையை எதிர்த்து நள்ளிரவில் 17 முதல் 20 மணிநேரம் கடுமையாகப் போரிட்டோம் என இந்தோ-திபெத்திய எல்லை காவல் படை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
இந்திய - சீன எல்லையான லடாக்கின் கல்வான் பகுதியில் ஜூன் 15-ம் தேதி இருநாட்டு வீரர்கள் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் 43 பேர் வரை உயிரிழந்து இருக்க கூடும் என்று தகவல்கள் கூறுகின்றன. எனினும், சீனா இதனை மறுத்தது.
இந்த விவகாரத்தைத் தொடர்ந்து லடாக் எல்லையில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வந்தது. இருநாடுகளும் வீரர்களையும், படைகளையும் குவித்து வந்தன. இருதரப்பிலும் பதற்றம் தணியும் வகையில், ராணுவ அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர் பேச்சுவார்த்தையில் ஒருமித்த கருத்து ஏற்பட்டதை அடுத்து, படைகளை விலக்கிக் கொள்ள இருநாடுகளும் ஒப்புதல் தெரிவித்தன. இதனால் எல்லையில் சற்று அமைதியான நிலை காணப்படுகிறது.
இந்நிலையில், சீன படையை எதிர்த்து நள்ளிரவில் 17 முதல் 20 மணிநேரம் கடுமையாக போரிட்டோம் என இந்தோ-திபெத்திய எல்லை காவல் படை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, இந்தோ-திபெத்திய எல்லை காவல் படை வெளியிட்டுள்ள செய்தியில், நாங்கள் எங்களை தற்காத்துக் கொள்ள திறம்பட செயல்பட்டதுடன், முன்னேறி வந்த சீன ராணுவத்தினரையும் (மக்கள் விடுதலை ராணுவம்) கடுமையாக தாக்கி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தோம்.
உயர்ந்த தொழில்திறனுடன் போரிட்ட எங்களது படையினர் காயமடைந்த இந்திய ராணுவ வீரர்களை பின்னுக்கு கொண்டு வந்தனர். ஒரு நாள் இரவு முழுவதும் எங்களுடைய படையினர் போர் செய்தபொழுதும், குறைந்த அளவிலேயே எங்கள் தரப்பில் காயமடைந்தனர். கல் வீச்சில் ஈடுபட்ட சீன ராணுவத்தினருக்கு சரியான பதிலடி கொடுத்தோம். அந்த இரவு முழுவதும் தீர்மானத்துடன் சீனப்படையை எதிர்த்து நிலைத்து நின்று 17 முதல் 20 மணிநேரம் கடுமையாக போரிட்டோம் என தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X