என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
“ஆயுதப் படை வீரர்களின் அழியாத தைரியத்திற்கு வணக்கம்” - ராஜ்நாத் சிங் டுவிட்டர் பதிவு
Byமாலை மலர்14 Aug 2020 6:08 PM GMT (Updated: 14 Aug 2020 6:08 PM GMT)
ஆயுதப் படை வீரர்களின் அழியாத தைரியத்திற்கு வணக்கம் செலுத்துவதாக மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
புதுடெல்லி:
இந்தியாவின் 74-வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது.
சுதந்திர தின விழா நாளை நடைபெறுவதை முன்னிட்டு மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டரில், “இந்தியாவின் சுதந்திர தினத்திற்கு முன்னதாக, தன்னலமற்ற முறையில் தேசத்திற்கு சேவை செய்யும் நமது ஆயுதப் படைகளின் துணிச்சலான வீரர்களின் அழியாத தைரியத்திற்கு வணக்கம் செலுத்துகிறேன். அவர்களின் ஒப்பிடமுடியாத தைரியமும் தேசபக்தியும் நம் நாடு பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், “ஆயுதப்படைகளுக்கு நான் அனுப்பிய செய்தியில், நம் தேசத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதில் அவர்களின் நேர்மறையான பங்கிற்கு எனது பாராட்டுகளைப் பகிர்ந்து கொள்கிறேன். ஆயுதப்படைகளை வலுப்படுத்தவும், அவர்களது குடும்பங்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களின் நலனை உறுதிப்படுத்தும் வகையில் எங்கள் அரசு செயல்படுகிறது” என்றும் ராஜ்நாத் சிங் பதிவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X