search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதுகாப்பு படையினர் ரோந்து பணி
    X
    பாதுகாப்பு படையினர் ரோந்து பணி

    ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு- இரண்டு போலீசார் பலி

    ஜம்மு-காஷ்மீர் நவ்காம் பகுதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரண்டு போலீசார் உயிரிழந்தனர்.
    ஜம்மு-காஷ்மீர்: 

    இந்தியா முழுவதும் நாளை 74-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சுதந்திர தின விழாவை சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்பதால், அந்த யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் ஸ்ரீநகரில் உள்ள நவ்காம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் இரண்டு போலீசார் உயிரிழந்தனர். ஒருவர் காயம் அடைந்தார்.
    Next Story
    ×