என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெங்களூரு வன்முறையின் போது மாயமான குட்டிகளை தேடி அலையும் தாய் பூனையின் பாசப் போராட்டம்
Byமாலை மலர்14 Aug 2020 3:03 AM GMT (Updated: 14 Aug 2020 3:03 AM GMT)
பெங்களூருவில் நடந்த வன்முறையின் போது மாயமான குட்டிகளை தாய் பூனை தேடி அலைந்து பாசப் போராட்டம் நடத்தி வருகிறது. இந்த உருக்கமான சம்பவம் டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலையத்தில் அரங்கேறி வருகிறது.
பெங்களூரு :
பெங்களூருவில் கடந்த 11-ந்தேதி இரவு டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி, காவல் பைரசந்திரா ஆகிய பகுதிகளில் பயங்கர வன்முறை ஏற்பட்டது. எம்.எல்.ஏ. அகண்ட சீனிவாச மூர்த்தி வீடு, அவரது அக்காள் வீடு உள்பட 3 பேரின் வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டது. மேலும் போலீஸ் வாகனங்களும், பொதுமக்களின் வாகனங்களும் வன்முறையாளர்களால் தீவைத்து எரிக்கப்பட்டன. இதைதொடர்ந்து கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 3 வாலிபர்கள் உயிரிழந்தனர். இந்த வன்முறையால் பலரின் சொத்துக்கள் சேதமாகி உள்ளன.
இந்த நிலையில் டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலையத்தில் நெஞ்சை உருக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது வன்முறையின் போது தனது குட்டிகளை பிரிந்த தாய் பூனை அதை தேடி அலைந்து பாசப் போராட்டம் நடத்தி வரும் சம்பவம் கடந்த 2 நாட்களாக அரங்கேறி வருகிறது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
இந்த போலீஸ் நிலையம் 2 தளத்தை கொண்டது. முதல் தளத்தில் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. அந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் தான் போலீசார் பறிமுதல் செய்த வாகனங்களை நிறுத்தியுள்ளனர். மேலும் அந்த தரைத்தளத்தை குடோன் போல் போலீசார் பயன்படுத்தி வந்தனர். இங்கு ஒரு பெண் பூனையும், ஆண் பூனையும் அடைக்கலம் அடைந்து வசித்து வந்தன. இதில் கர்ப்பம் தரித்திருந்த பெண் பூனை கடந்த வாரம் 4 குட்டிகளை ஈன்றது.
இந்த நிலையில் 11-ந்தேதி நடந்த வன்முறையின் போது மர்மநபர்கள், டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலைய வளாகத்திற்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். மேலும் தரைத்தளத்திற்கு சென்ற வன்முறையாளர்கள் அங்கு நிறுத்திவைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் அங்கிருந்த பொருட்களுக்கு தீவைத்தனர். இதில் அந்த பொருட்கள் எரிந்து நாசமானது.
இந்த வன்முறையால் தாய் பூனை, தனது குட்டிகளை பிரிந்தது. அந்த குட்டி பூனைகளின் கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை. இதனால் அந்த தாய் யானை, தனது குட்டிகளை தேடி போலீஸ் நிலைய பகுதிகளில் கடந்த 2 நாட்களாக சுற்றி சுற்றி வருகிறது. மியாவ்... மியாவ்... என சத்தம் போட்டப்படி தனது குட்டிகளை தேடி அந்த தாய் பூனை சோகத்துடன் அலைந்து திரிந்து வரும் காட்சி காண்போரின் நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது.
மேலும் தாய் பூனையின் பாசப் போராட்ட காட்சியை பார்த்து போலீசாரும் கண்கலங்கி வருகிறார்கள்.
பெங்களூருவில் கடந்த 11-ந்தேதி இரவு டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி, காவல் பைரசந்திரா ஆகிய பகுதிகளில் பயங்கர வன்முறை ஏற்பட்டது. எம்.எல்.ஏ. அகண்ட சீனிவாச மூர்த்தி வீடு, அவரது அக்காள் வீடு உள்பட 3 பேரின் வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டது. மேலும் போலீஸ் வாகனங்களும், பொதுமக்களின் வாகனங்களும் வன்முறையாளர்களால் தீவைத்து எரிக்கப்பட்டன. இதைதொடர்ந்து கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 3 வாலிபர்கள் உயிரிழந்தனர். இந்த வன்முறையால் பலரின் சொத்துக்கள் சேதமாகி உள்ளன.
இந்த நிலையில் டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலையத்தில் நெஞ்சை உருக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது வன்முறையின் போது தனது குட்டிகளை பிரிந்த தாய் பூனை அதை தேடி அலைந்து பாசப் போராட்டம் நடத்தி வரும் சம்பவம் கடந்த 2 நாட்களாக அரங்கேறி வருகிறது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
இந்த போலீஸ் நிலையம் 2 தளத்தை கொண்டது. முதல் தளத்தில் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. அந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் தான் போலீசார் பறிமுதல் செய்த வாகனங்களை நிறுத்தியுள்ளனர். மேலும் அந்த தரைத்தளத்தை குடோன் போல் போலீசார் பயன்படுத்தி வந்தனர். இங்கு ஒரு பெண் பூனையும், ஆண் பூனையும் அடைக்கலம் அடைந்து வசித்து வந்தன. இதில் கர்ப்பம் தரித்திருந்த பெண் பூனை கடந்த வாரம் 4 குட்டிகளை ஈன்றது.
இந்த நிலையில் 11-ந்தேதி நடந்த வன்முறையின் போது மர்மநபர்கள், டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலைய வளாகத்திற்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். மேலும் தரைத்தளத்திற்கு சென்ற வன்முறையாளர்கள் அங்கு நிறுத்திவைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் அங்கிருந்த பொருட்களுக்கு தீவைத்தனர். இதில் அந்த பொருட்கள் எரிந்து நாசமானது.
இந்த வன்முறையால் தாய் பூனை, தனது குட்டிகளை பிரிந்தது. அந்த குட்டி பூனைகளின் கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை. இதனால் அந்த தாய் யானை, தனது குட்டிகளை தேடி போலீஸ் நிலைய பகுதிகளில் கடந்த 2 நாட்களாக சுற்றி சுற்றி வருகிறது. மியாவ்... மியாவ்... என சத்தம் போட்டப்படி தனது குட்டிகளை தேடி அந்த தாய் பூனை சோகத்துடன் அலைந்து திரிந்து வரும் காட்சி காண்போரின் நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது.
மேலும் தாய் பூனையின் பாசப் போராட்ட காட்சியை பார்த்து போலீசாரும் கண்கலங்கி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X