என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காங்கிரசில் இருந்து விலகியது புத்திசாலித்தனமான முடிவு: எஸ்.எம்.கிருஷ்ணா
Byமாலை மலர்14 Aug 2020 2:50 AM GMT (Updated: 14 Aug 2020 2:50 AM GMT)
காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்ததன் மூலம் நான் ஒரு புத்திசாலித்தனமான முடிவை எடுத்து உள்ளதாக நினைக்கிறேன் என்று கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.
பெங்களூரு :
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணா அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:-
நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளிலும் ஜனநாயகம் இல்லை. கட்சி தலைமை விமர்சிக்கும் பயத்தை கைவிட வேண்டும். காங்கிரஸ் சக்தி வாய்ந்த கட்சியாக இல்லாமல் போய் விட்டது. பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் மறுசீரமைப்பு மூலம் கட்சியின் பலம் அதிகரிக்கும். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் பா.ஜனதா வெற்றி பெறும். மோடி மீண்டும் பிரதமர் ஆவார்.
காங்கிரசில் 45 ஆண்டுகள் இருந்து உள்ளேன். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜனதாவில் இணைந்தேன். தற்போது நான் மகிழ்ச்சியாக தான் உள்ளேன். இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜோதிர் ஆதித்ய சிந்தியா பா.ஜனதாவில் இணைந்தார். ராஜஸ்தான் அரசியலிலும் கிளர்ச்சி ஏற்பட்டது. சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கினார். தற்போது அவர் சமாதானமாகி உள்ளார். அது அந்த கட்சியின் பிரச்சினை.
ஒவ்வொரு கட்சியிலும் உள்ள இளைஞர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தவும், தங்களை கட்சிக்குள் வளர்த்து கொள்ளவும் விரும்புகிறார்கள். இதற்கு மூத்த தலைவர்கள் வழிவகை செய்து கொடுக்க வேண்டும். துடிப்பான இளைஞர்களுக்கு பேசவும் சற்று வாய்ப்பு அளிக்க வேண்டும். காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்ததன் மூலம் நான் ஒரு புத்திசாலித்தனமான முடிவை எடுத்து உள்ளதாக நினைக்கிறேன். வளர்ச்சி பயணத்தின் ஒரு பகுதியாக நானும் இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணா அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:-
நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளிலும் ஜனநாயகம் இல்லை. கட்சி தலைமை விமர்சிக்கும் பயத்தை கைவிட வேண்டும். காங்கிரஸ் சக்தி வாய்ந்த கட்சியாக இல்லாமல் போய் விட்டது. பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் மறுசீரமைப்பு மூலம் கட்சியின் பலம் அதிகரிக்கும். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் பா.ஜனதா வெற்றி பெறும். மோடி மீண்டும் பிரதமர் ஆவார்.
காங்கிரசில் 45 ஆண்டுகள் இருந்து உள்ளேன். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜனதாவில் இணைந்தேன். தற்போது நான் மகிழ்ச்சியாக தான் உள்ளேன். இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜோதிர் ஆதித்ய சிந்தியா பா.ஜனதாவில் இணைந்தார். ராஜஸ்தான் அரசியலிலும் கிளர்ச்சி ஏற்பட்டது. சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கினார். தற்போது அவர் சமாதானமாகி உள்ளார். அது அந்த கட்சியின் பிரச்சினை.
ஒவ்வொரு கட்சியிலும் உள்ள இளைஞர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தவும், தங்களை கட்சிக்குள் வளர்த்து கொள்ளவும் விரும்புகிறார்கள். இதற்கு மூத்த தலைவர்கள் வழிவகை செய்து கொடுக்க வேண்டும். துடிப்பான இளைஞர்களுக்கு பேசவும் சற்று வாய்ப்பு அளிக்க வேண்டும். காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்ததன் மூலம் நான் ஒரு புத்திசாலித்தனமான முடிவை எடுத்து உள்ளதாக நினைக்கிறேன். வளர்ச்சி பயணத்தின் ஒரு பகுதியாக நானும் இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X