search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அசோக் கெலாட்- சச்சின் பைலட்
    X
    அசோக் கெலாட்- சச்சின் பைலட்

    நேருக்குநேர் சந்தித்து கொண்ட அசோக் கெலாட் - சச்சின் பைலட்: குழப்பம் முடிவுக்கு வந்தது

    ராஜஸ்தான் முதல்வர் வீட்டில் நடைபெற்ற எம்.எல்.ஏ.-க்கள் கூட்டத்தில் அசோக் கெலாட் - சச்சின் பைலட் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர்.
    சச்சின் பைலட் 18 எம்.எல்.ஏ.க்களுடன் போர்க்கொடி தூக்கி ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு நெருக்கடி கொடுத்தார். இதனால் கடந்த ஒரு மாதமாக ராஜஸ்தான் அரசியலில் அசாதரண சூழ்நிலை ஏற்பட்டது.

    சட்டசபை கூட்டம் நாளை தொடங்குகிறது. இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன் சச்சின் பைலட் ராகுல் காந்தியுடன் சந்தித்தார். அப்போது அசோக் பைலட் உடன் இணைந்து செயல்பட சம்மதம் தெரிவித்தார்.

    சச்சின் பைலட் குறைகளை கேட்க பிரியங்கா காந்தி தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.  இதனால் சுமார் ஒரு மாதம் கழித்து சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.-க்களுடன் சொந்த மாநிலம் திரும்பினார்.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள்

    இந்நிலையில் இன்று மாலை காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் முதலமைச்சர் அசோக் பைலட் வீட்டில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இதில் சச்சின் பைலட் கலந்து கொண்டார். அசோக் பைலட் உடன் சேர்ந்து வெற்றி சின்னமான இரண்டு விரல்களை சச்சின் பைலட் தூக்கி காண்பித்தார். இதன்மூலம் ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சிக்குள் நிலவி வந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.
    Next Story
    ×