என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா தடுப்பூசி போடுவதில் எந்த பகுதி மக்களுக்கு முன்னுரிமை
Byமாலை மலர்12 Aug 2020 11:43 PM GMT (Updated: 12 Aug 2020 11:43 PM GMT)
கொரோனா தடுப்பூசிகளைப் போடுவதில் எந்தப்பகுதி மக்களுக்கு முன்னுரிமை அளிப்பது என்பது குறித்து தேசிய நிபுணர்கள் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அதேசமயம் இந்த வைரசை ஒழிப்பதற்கான தடுப்பூசியை உருவாக்குவதில் இந்திய விஞ்ஞானிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே உலகின் முதல் கொரோனா தடுப்பூசி ரஷியாவில் தற்போது தயாராகி உள்ளது. உலகின் பல நாடுகளில் ரஷியாவிடமிருந்து தடுப்பூசியை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றன.
இந்தநிலையில் கொரோனா தடுப்பூசி மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கான உத்திகள் குறித்து கொரோனா தடுப்பூசித் திட்டத்தை அமல்படுத்தும் தேசிய நிபுணர் குழு நேற்று முதல் முறையாக ஆலோசனை நடத்தியது.
நிதிஆயோக் அமைப்பின் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளரும் இணை தலைவராக இதில் பங்கேற்றார்.
தடுப்பூசி மருந்து இருப்பு வைப்பது, தேவைக்கேற்ப கிடைக்கச்செய்வதற்கு டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்குவதற்கான, சிந்தனைகளை உருவாக்கி அமல்படுத்துவதற்கான நடைமுறைகள் குறித்து இந்த குழு விவாதித்தது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உற்பத்தியாளர்களிடம் இருந்து கொரோனா தடுப்பூசி மருந்துகளை வாங்குவது, இந்த தடுப்பூசிகளைப் போடுவதில் எந்தப்பகுதி மக்களுக்கு முன்னுரிமை அளிப்பது என்ற வழிகாட்டுதல் கொள்கைகளை உருவாக்குதல் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
கொரோனா தடுப்பூசி மருந்து வாங்குவதற்கு தேவைப்படும் நிதி மற்றும் அவற்றை பெறுவதற்கான வாய்ப்புகள் பற்றியும் நிபுணர்கள் விவாதித்தனர். மேலும் மருந்து கொள்முதலில் மாநிலங்கள் தனித்தனியான பாதைகளை வகுத்துக்கொள்ள வேண்டாம் என்று இந்த குழு ஆலோசனை வழங்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அதேசமயம் இந்த வைரசை ஒழிப்பதற்கான தடுப்பூசியை உருவாக்குவதில் இந்திய விஞ்ஞானிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே உலகின் முதல் கொரோனா தடுப்பூசி ரஷியாவில் தற்போது தயாராகி உள்ளது. உலகின் பல நாடுகளில் ரஷியாவிடமிருந்து தடுப்பூசியை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றன.
இந்தநிலையில் கொரோனா தடுப்பூசி மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கான உத்திகள் குறித்து கொரோனா தடுப்பூசித் திட்டத்தை அமல்படுத்தும் தேசிய நிபுணர் குழு நேற்று முதல் முறையாக ஆலோசனை நடத்தியது.
நிதிஆயோக் அமைப்பின் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளரும் இணை தலைவராக இதில் பங்கேற்றார்.
தடுப்பூசி மருந்து இருப்பு வைப்பது, தேவைக்கேற்ப கிடைக்கச்செய்வதற்கு டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்குவதற்கான, சிந்தனைகளை உருவாக்கி அமல்படுத்துவதற்கான நடைமுறைகள் குறித்து இந்த குழு விவாதித்தது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உற்பத்தியாளர்களிடம் இருந்து கொரோனா தடுப்பூசி மருந்துகளை வாங்குவது, இந்த தடுப்பூசிகளைப் போடுவதில் எந்தப்பகுதி மக்களுக்கு முன்னுரிமை அளிப்பது என்ற வழிகாட்டுதல் கொள்கைகளை உருவாக்குதல் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
கொரோனா தடுப்பூசி மருந்து வாங்குவதற்கு தேவைப்படும் நிதி மற்றும் அவற்றை பெறுவதற்கான வாய்ப்புகள் பற்றியும் நிபுணர்கள் விவாதித்தனர். மேலும் மருந்து கொள்முதலில் மாநிலங்கள் தனித்தனியான பாதைகளை வகுத்துக்கொள்ள வேண்டாம் என்று இந்த குழு ஆலோசனை வழங்கியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X