search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்ரா படைப்பிரிவினர்
    X
    கோப்ரா படைப்பிரிவினர்

    சத்தீஸ்கரில் 4 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

    நக்சலைட்டுக்கும் கோப்ரா படைப்பிரிவினருக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் நான்கு நக்சலைட்டுகள் சுட்டுக்கொள்ளப்பட்டனர்.
    சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக கோப்ரா படைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து 201 பட்டாலியன் கோப்ரா, 223 பட்டாலியன் சிஆர்பிஎஃப் வீரர்கள், மாவட்ட ரிசர்வ் படையுடன் இணைந்து ஜகர்குண்டா காட்டுப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் நான்கு நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். மேலும், ஆயுதங்களையும் கைப்பற்றினர். இந்த தகவலை ஐஜி பாஸ்டர் பி. சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×