search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெழுகுச்சிலையுடன் தொழில் அதிபர் ஸ்ரீனிவாஸ் குப்தா
    X
    மெழுகுச்சிலையுடன் தொழில் அதிபர் ஸ்ரீனிவாஸ் குப்தா

    மனைவிக்கு மெழுகுச்சிலை வைத்து உருகிய தொழில் அதிபர்

    கர்நாடகாவில் தொழில் அதிபர் ஒருவர் இறந்துபோன தனது மனைவிக்காக கனவு இல்லத்தை கட்டி மெழுகுச்சிலை அமைத்துள்ளார்.
    கர்நாடக மாநிலத்தின் தொழில் அதிபர் ஸ்ரீனிவாஸ் குப்தா. இவரது மனைவி மாதவி. கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற விபத்தில் மாதவி உயிரிழந்தார். மனைவி இல்லாத துக்கம் ஸ்ரீனிவாஸ் குப்தாவை மிகவும் வாட்டியது. அவர் நினைவாக இருந்த ஸ்ரீனிவாஸ் குப்தா, மனைவி மாதவிக்காக கனவு இல்லத்தை கட்ட தொடங்கினார். அந்த வீட்டின் புதுமனை புகுவிழா இன்று நடைபெற்றது.

    மெழுகுச்சிலை

    விழாவிற்கு வந்திருந்த அனைவரும் ஆச்சர்யம் பட்டனர். ஏனென்றால், ஸ்ரீனிவாஸ் குப்தா தனது மனைவி நினைவாக கட்டிய மாதவி கனவு இல்லத்திற்குள் சிலிகான் மெழுகுவினால் ஆன தனது மனைவி சிலையை அமைத்திருந்தார். அந்த சிலையை பார்த்தவர்கள் மாதவி உயிருடன் இருப்பது போல் இருக்கின்றது என்றனர். மேலும், தனது கனவி இல்ல திறப்பு விழாவிற்கு மனைவி வந்தபோன்று ஸ்ரீனிவாஸ் குப்தா உணர்ந்தார்.

    மெழுகுச்சிலை

    இதுகுறித்து ஸ்ரீனிவாஸ் குப்தா கூறுகையில் ‘‘எனது மனைவியின் கனவு வீட்டில் என் மனைவி இருப்பது சிறந்த உணர்வாக உள்ளது. இது அவளுடைய கனவு இல்லம். ஆர்ட்டிஸ்ட் ஸ்ரீதர் மூர்த்தி கடந்த ஒரு வருடமாக என மனைவியின் சிலையை தயார் செய்தார். மனைவியின் சிலையின் ஆயுட்காலம் நீடிப்பதற்காக சிலிகான் பயன்படுத்தப்பட்டது’’ என்றார்.
    Next Story
    ×