என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாஜக அரசுக்கு எதிராக தீவிர போராட்டம்: டி.கே.சிவக்குமார்
Byமாலை மலர்11 Aug 2020 3:20 AM GMT (Updated: 11 Aug 2020 3:20 AM GMT)
கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு மக்கள் விரோத ஆட்சியை நடத்துகிறது. இந்த அரசுக்கு எதிராக காங்கிரஸ் தீவிர போராட்டம் நடத்தும் என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
பெங்களூரு :
பெங்களூருவில் பல்வேறு அமைப்புகள் சார்பில் இந்தியாவை பாதுகாப்போம் என்ற பெயரில் நடைபெற்று வரும் போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டார். பின்னர் அந்த போராட்டத்தில் டி.கே.சிவக்குமார் பேசியதாவது:-
நாட்டை பாதுகாக்க அனைத்து அமைப்புகளும் ஒன்று சேர்ந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தொழிலாளர்கள் அமைப்புகளும் போராட்ட களத்தில் குதித்திருப்பதை வரவேற்கிறேன். கர்நாடகத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி மக்கள் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். மக்களிடம் பணம் இல்லை. ஆயிரக்கணக்கானோர் வேலையை இழந்துள்ளனர்.
இந்த சூழ்நிலையிலும் கொரோனா உபகரணங்கள் வாங்கியதில் பல கோடி ரூபாயை அரசு ஊழல் செய்திருக்கிறது. விவசாயிகளுக்கு எதிராக நிலச்சீர்திருத்த சட்ட திருத்தம், ஏ.பி.எம்.சி.யில் சட்ட திருத்தம் செய்திருக்கிறது. இதன் காரணமாக விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு மக்கள் விரோத ஆட்சியை நடத்துகிறது. ஏழை- எளிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர். விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அரசுக்கு எதிராக காங்கிரஸ் தீவிர போராட்டம் நடத்தும். மக்கள் விரோத அரசுக்கு எதிராக ஒவ்வொரு தாலுகாவில் போராட்டம் நடத்தப்படும். விவசாயிகள், மற்ற அமைப்புகளுடன் சேர்ந்து போராடவும் காங்கிரஸ் தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
பெங்களூருவில் பல்வேறு அமைப்புகள் சார்பில் இந்தியாவை பாதுகாப்போம் என்ற பெயரில் நடைபெற்று வரும் போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டார். பின்னர் அந்த போராட்டத்தில் டி.கே.சிவக்குமார் பேசியதாவது:-
நாட்டை பாதுகாக்க அனைத்து அமைப்புகளும் ஒன்று சேர்ந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தொழிலாளர்கள் அமைப்புகளும் போராட்ட களத்தில் குதித்திருப்பதை வரவேற்கிறேன். கர்நாடகத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி மக்கள் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். மக்களிடம் பணம் இல்லை. ஆயிரக்கணக்கானோர் வேலையை இழந்துள்ளனர்.
இந்த சூழ்நிலையிலும் கொரோனா உபகரணங்கள் வாங்கியதில் பல கோடி ரூபாயை அரசு ஊழல் செய்திருக்கிறது. விவசாயிகளுக்கு எதிராக நிலச்சீர்திருத்த சட்ட திருத்தம், ஏ.பி.எம்.சி.யில் சட்ட திருத்தம் செய்திருக்கிறது. இதன் காரணமாக விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு மக்கள் விரோத ஆட்சியை நடத்துகிறது. ஏழை- எளிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர். விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அரசுக்கு எதிராக காங்கிரஸ் தீவிர போராட்டம் நடத்தும். மக்கள் விரோத அரசுக்கு எதிராக ஒவ்வொரு தாலுகாவில் போராட்டம் நடத்தப்படும். விவசாயிகள், மற்ற அமைப்புகளுடன் சேர்ந்து போராடவும் காங்கிரஸ் தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X