என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுதந்திர தின உரையின்போது தன்னம்பிக்கை இந்தியாவுக்கான புதிய வடிவத்தை மோடி முன்வைப்பார் - ராஜ்நாத் சிங்
Byமாலை மலர்10 Aug 2020 12:03 PM GMT (Updated: 10 Aug 2020 12:03 PM GMT)
பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையின்போது தன்னம்பிக்கை இந்தியாவுக்கான புதிய வடிவத்தை முன்வைப்பார் என ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.
புதுடெல்லி:
சுதந்திரப் போராட்ட வீரர் உத்தம் சிங்குக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றார். அப்போது பேசிய அவர் பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையின்போது தன்னம்பிக்கை இந்தியாவுக்கான புதிய வடிவத்தை முன்வைப்பார் என கூறினார்.
சுதந்திரப் போராட்ட வீரர் உத்தம் சிங்குக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றார். அப்போது பேசிய அவர் பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையின்போது தன்னம்பிக்கை இந்தியாவுக்கான புதிய வடிவத்தை முன்வைப்பார் என கூறினார்.
இதுபற்றி அவர் கூறுகையில் “இந்தியாவின் சுயமரியாதை மற்றும் இறையாண்மைக்கு எந்த விலையையும் நமது அரசாங்கம் அனுமதிக்காது. தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவுக்கான மோடியின் முன் முயற்சியை செயல்படுத்த அரசாங்கத்தின் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இது சுதேசி இயக்கத்துக்கான மகாத்மா காந்தியின் உந்துதலுக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுக்கும் முயற்சியாகும்.
சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் கோபுரங்களில் இருந்து தனது உரையில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு தன்னம்பிக்கை இந்தியாவுக்கான புதிய வடிவத்தை தேசத்தின் முன் முன்வைப்பார்” எனக் கூறினார். முன்னதாக சுயசார்பு திட்டத்தின்கீழ், பாதுகாப்புத்துறைக்கான 101 வகையான ராணுவத் தளவாடங்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுவதாக மத்திய ராணுவ அமைச்சகம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X