என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உள்நாட்டு விமான சேவை: 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம்- மத்திய மந்திரி தகவல்
Byமாலை மலர்10 Aug 2020 8:45 AM GMT (Updated: 10 Aug 2020 8:45 AM GMT)
கொரோனா தடைக்குப்பின் தொடங்கப்பட்ட உள்நாட்டு விமான சேவையின் மூலம் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியாவில் மார்ச் 25-ந்தேதி நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை மே மாதம் 25-ந்தேதி மீண்டும் தொடங்கப்பட்டது. பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளுடன் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆரம்ப காலக்கட்டத்தில் பயணிகள் பெருமளவில் பயணம் செய்யவில்லை.
அதன்பின் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர ஆரம்பித்தது. நேற்று மட்டும் 911 விமானங்களில் 93,062 பேர் பயணித்துள்ளனர்.
மே 25-ந்தேதியில் இருந்து தற்போது வரை 56,792 விமான்ங்கள் மூலம் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளதாக மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X