search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி கோவில்
    X
    திருப்பதி கோவில்

    திருப்பதி ஏழுமலையான் கோவில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா

    திருப்பதி ஏழுமலையான் கோவில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு 2 மாதங்களில் கொரோனா உறுதியாகியிருப்பதாக தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார்.
    திருப்பதி:

    திருப்பதியில் தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு 2 மாதங்களில் கொரோனா உறுதியானது. அவர்களில் 402 பேர் குணமடைந்து விட்டனர். 338 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

    ஜூலை மாதத்தில் மட்டும் ஏழுமலையான் கோவிலில் 2 லட்சத்து 38 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். 16 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பில் பக்தர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர். பக்தர்களுக்கு 11 லட்சத்து 35 ஆயிரம் லட்டுகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

    Next Story
    ×