search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி, பினராயி விஜயன்
    X
    எடப்பாடி பழனிசாமி, பினராயி விஜயன்

    இடுக்கி நிலச்சரிவு: பலியானோர் எண்ணிக்கை 29 ஆக உயர்வு - கேரள முதல்வருடன் தமிழக முதல்வர் பேச்சு

    இடுக்கி மூணாறு தேயிலை தோட்டத்தில் நிகழ்ந்த நிலச்சரிவில் பலியானோரின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ள நிலையில் அம்மாநில முதல்வருடன் தமிழக முதல்வர் பழனிசாமி பேசினார்.
    கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ராஜமலை பகுதியில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. ராஜமலை பெட்டிமுடி கன்ணண் தேவன் டீ எஸ்டேட்டில் நடந்த நிலச்சரிவில் சுமார் 20 வீடுகள் மண்ணில் புதைந்தன. தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 80-க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

    வீடுகளுடன் மண்ணுக்குள் புதையுண்டவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 200-க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று வரை மண்ணுக்குள் புதைந்து 26 பேர் உயிரிழந்தனர்.

    நிலச்சரிவு


    மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்போது நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளுடன் மண்ணுக்குள் புதையுண்டவர்களை மீட்கும்  மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் மூணாறு நிலச்சரிவில் தமிழக தொழிலாளர்கள் உயிரிழந்தது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் தமிழக முதல்வர் பழனிசாமி பேசினார்.  மீட்பு, நிவாரணப் பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்யத் தயாராக உள்ளதாக அம்மாநில முதல்வருக்கு உறுதியளித்ததாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×