என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவில் கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 49 ஆயிரம் பேர் குணம் அடைந்தனர்
Byமாலை மலர்9 Aug 2020 3:29 AM GMT (Updated: 9 Aug 2020 3:29 AM GMT)
இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரே நாளில், கொரோனா பாதித்து பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 48 ஆயிரத்து 900 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பினர்.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா பாதித்து பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 48 ஆயிரத்து 900 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பினர்.
இதன்மூலம் இதுவரை நாட்டில் குணம் அடைந்தோர் எண்ணிக்கை 14 லட்சத்தை கடந்துள்ளது. சரியாக 14 லட்சத்து 27 ஆயிரத்து 5 பேர் கொரோனாவில் இருந்து மீண்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் தற்போது கொரோனாவில் இருந்து மீண்டோர் விகிதம், 68.32 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி நாட்டில் தொற்று பாதித்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை என்பது 6 லட்சத்து 19 ஆயிரத்து 88 ஆக உள்ளது.
இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 2.04 சதவீதமாக குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக புள்ளி விவரம் கூறுகிறது.
இதுவரையில் 2 கோடியே 33 லட்சத்து 87 ஆயிரத்து 171 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவிக்கிறது.
இந்தியாவில் கொரோனா பாதித்து பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 48 ஆயிரத்து 900 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பினர்.
இதன்மூலம் இதுவரை நாட்டில் குணம் அடைந்தோர் எண்ணிக்கை 14 லட்சத்தை கடந்துள்ளது. சரியாக 14 லட்சத்து 27 ஆயிரத்து 5 பேர் கொரோனாவில் இருந்து மீண்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் தற்போது கொரோனாவில் இருந்து மீண்டோர் விகிதம், 68.32 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி நாட்டில் தொற்று பாதித்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை என்பது 6 லட்சத்து 19 ஆயிரத்து 88 ஆக உள்ளது.
இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 2.04 சதவீதமாக குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக புள்ளி விவரம் கூறுகிறது.
இதுவரையில் 2 கோடியே 33 லட்சத்து 87 ஆயிரத்து 171 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவிக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X