என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மனைவி ருசியாக சமைக்காததால் திருமணமான 4 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை
Byமாலை மலர்8 Aug 2020 2:07 PM GMT (Updated: 8 Aug 2020 2:07 PM GMT)
மனைவி ருசியாக சமைக்காததால் திருமணமான 4 மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பல்லாரி அருகே நடந்து உள்ளது.
பெலகாவி:
கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டம் கூட்லகி தாலுகா கூருல்கல் கிராமத்தை சேர்ந்தவர் சரனேஷ்(வயது 29). இவருக்கும், அதேப்பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்து இருந்தது. இந்த நிலையில் சரனேசின் மனைவிக்கு ருசியாக சமையல் செய்ய தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக சரனேசுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை சரனேசுக்கு அவரது மனைவி சாப்பாடு செய்து கொடுத்து உள்ளார். ஆனால் சாப்பாடு ருசியாக இல்லை என தெரிகிறது. இதுதொடர்பாக சரனேசுக்கும், மனைவிக்கும் இடையே மீண்டும் தகராறு உண்டானது. இதனால் சரனேஷ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
பின்னர் கிராமத்தையொட்டி காட்டுப்பகுதிக்கு சென்ற சரனேஷ், அங்குள்ள ஒரு மரத்தில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த ஒசஹள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரனேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், மனைவி ருசியாக சமைக்காததால் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த சரனே ஷ் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து சரனேசின் மனைவி அளித்த புகாரின்பேரில் ஒசஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
மனைவி ருசியாக சமைக்காததால் திருமணமான 4 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பல்லாரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டம் கூட்லகி தாலுகா கூருல்கல் கிராமத்தை சேர்ந்தவர் சரனேஷ்(வயது 29). இவருக்கும், அதேப்பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்து இருந்தது. இந்த நிலையில் சரனேசின் மனைவிக்கு ருசியாக சமையல் செய்ய தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக சரனேசுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை சரனேசுக்கு அவரது மனைவி சாப்பாடு செய்து கொடுத்து உள்ளார். ஆனால் சாப்பாடு ருசியாக இல்லை என தெரிகிறது. இதுதொடர்பாக சரனேசுக்கும், மனைவிக்கும் இடையே மீண்டும் தகராறு உண்டானது. இதனால் சரனேஷ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
பின்னர் கிராமத்தையொட்டி காட்டுப்பகுதிக்கு சென்ற சரனேஷ், அங்குள்ள ஒரு மரத்தில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த ஒசஹள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரனேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், மனைவி ருசியாக சமைக்காததால் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த சரனே ஷ் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து சரனேசின் மனைவி அளித்த புகாரின்பேரில் ஒசஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
மனைவி ருசியாக சமைக்காததால் திருமணமான 4 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பல்லாரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X