search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோழிக்கோடு விமான  விபத்து
    X
    கோழிக்கோடு விமான விபத்து

    இரண்டாக பிளந்த விமானம்: விமானி உயிரிழப்பு- பலர் காயம்

    கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தில் விமானி உயிரிழந்துள்ளார்.
    துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-344 விமானம் வந்தது. விமானத்தில் 10 குழந்தைகள், 2 விமானிகள், ஐந்து பணிப்பெண்கள் உள்பட மொத்தம் 191 பேர் இருந்தனர்.

    விமானம் 10-வது ஓடுதளத்தில் தரையிறங்கியது. ஆனால் ஓடுதளத்தையும் தாண்டி விமான நிற்காமல் சென்றது. இதனால் அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்தது. இதில் விமானம் இரண்டாக பிளந்தது. இதனால் விமானத்தின் முன்பகுதியில் இருந்தவர்கள் பலத்த காயம் அடைந்தனர்.

    முதற்கட்ட தகவலில் விமானி ஒருவர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. மீட்டுப் பணியில் தேசிய பேரிடர் மீட்புப்படை, தீயணைப்பு வீரர்கள், போலீசார்கள் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×