என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவின் வயநாடு, கோழிக்கோடு பகுதிகளுக்கு ரெட் அலர்ட் - இந்திய வானிலை மையம்
Byமாலை மலர்6 Aug 2020 4:53 AM GMT (Updated: 6 Aug 2020 4:53 AM GMT)
கபிணி அணைப் பகுதியில் கனமழை பெய்து வருவதால் கேரளாவின் வயநாடு, கோழிக்கோடு பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
கர்நாடக மாநிலத்தின் மைசூரு மாவட்டத்தில் கபினி அணை அமைந்துள்ளது. இந்த அணை கபிலா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவு 2,284.80 அடி(கடல் மட்டத்தில் இருந்து) ஆகும்.
இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக கேரள மாநிலம் வயநாடு பகுதி விளங்குகிறது. தற்போது வயநாடு, மைசூரு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. கபிலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கபினி அணைக்கு கடந்த சில தினங்களாக நீர்வரத்து அதிகரித்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில், கேரளாவில் உள்ள வயநாடு, கோழிக்கோடு பகுதிகளுக்கு இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனமழை பெய்து வருவதைத் தொடர்ந்து இந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X