என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கர்நாடகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா: வீட்டு தனிமையில் சிகிச்சை
Byமாலை மலர்6 Aug 2020 3:34 AM GMT (Updated: 6 Aug 2020 3:34 AM GMT)
கர்நாடகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பெங்களூரு :
கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், எம்.எல்.சி.க்கள் என நேற்று முன்தினம் வரை மக்கள் பிரதிநிதிகள் 32 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் கர்நாடகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
மைசூரு மாவட்டம் சாமுண்டீஸ்வரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஜி.டி.தேவேகவுடா. இவர் ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்தவர் ஆவார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் அவர் தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி இருந்தார். இந்த நிலையில் ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ.வுக்கு, நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனால் ஜி.டி.தேவேகவுடா தன்னை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ.வும் உறுதிபடுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
எனக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. அறிகுறியே இல்லாமல் என்னை வைரஸ் தாக்கி உள்ளது. தற்போது மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறேன். கடந்த 7 நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக தங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். மேலும் வீட்டில் தனிமையில் இருங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ. கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவை தோற்கடித்து எம்.எல்.ஏ. ஆனவர். மேலும் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசில் உயர்கல்வித்துறை மந்திரியாகவும் ஜி.டி.தேவேகவுடா பணியாற்றி உள்ளார்.
கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், எம்.எல்.சி.க்கள் என நேற்று முன்தினம் வரை மக்கள் பிரதிநிதிகள் 32 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் கர்நாடகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
மைசூரு மாவட்டம் சாமுண்டீஸ்வரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஜி.டி.தேவேகவுடா. இவர் ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்தவர் ஆவார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் அவர் தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி இருந்தார். இந்த நிலையில் ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ.வுக்கு, நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனால் ஜி.டி.தேவேகவுடா தன்னை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ.வும் உறுதிபடுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
எனக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. அறிகுறியே இல்லாமல் என்னை வைரஸ் தாக்கி உள்ளது. தற்போது மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறேன். கடந்த 7 நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக தங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். மேலும் வீட்டில் தனிமையில் இருங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ. கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவை தோற்கடித்து எம்.எல்.ஏ. ஆனவர். மேலும் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசில் உயர்கல்வித்துறை மந்திரியாகவும் ஜி.டி.தேவேகவுடா பணியாற்றி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X