என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா பாதிப்புக்கு உள்ளான சித்தராமையா குணமடைய எடியூரப்பா வாழ்த்து
Byமாலை மலர்5 Aug 2020 3:33 AM GMT (Updated: 5 Aug 2020 3:33 AM GMT)
கொரோனா இருப்பது உறுதியாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் முதல்-மந்திரியும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா விரைவில் குணமடைந்து, உடல் ஆரோக்கியம் பெற வேண்டும் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.
பெங்களூரு :
கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சித்தராமையாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து, பழைய விமான நிலைய ரோட்டில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதே மருத்துவமனையில் தான் கொரோனா பாதிப்புக்கு உள்ளான முதல்-மந்திரி எடியூரப்பாவும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஒரே மருத்துவமனையில் 2 பேரும் சிகிச்சை பெற்று வருவதால், எடியூரப்பா உடல் நிலை குறித்து சித்தராமையாவும், சித்தராமையா உடல் நிலை குறித்து எடியூரப்பாவும் டாக்டர்களிடம் கேட்டு அறிந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் முதல்-மந்திரி எடியூரப்பா தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-
முன்னாள் முதல்-மந்திரியும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையாவுக்கு கொரோனா இருப்பது உறுதியாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து, உடல் ஆரோக்கியம் பெற வேண்டும்.
அவர் எப்போதும் போல தன்னுடைய பணிகளை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு எடியூரப்பா கூறியுள்ளார்.
கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சித்தராமையாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து, பழைய விமான நிலைய ரோட்டில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதே மருத்துவமனையில் தான் கொரோனா பாதிப்புக்கு உள்ளான முதல்-மந்திரி எடியூரப்பாவும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஒரே மருத்துவமனையில் 2 பேரும் சிகிச்சை பெற்று வருவதால், எடியூரப்பா உடல் நிலை குறித்து சித்தராமையாவும், சித்தராமையா உடல் நிலை குறித்து எடியூரப்பாவும் டாக்டர்களிடம் கேட்டு அறிந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் முதல்-மந்திரி எடியூரப்பா தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-
முன்னாள் முதல்-மந்திரியும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையாவுக்கு கொரோனா இருப்பது உறுதியாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து, உடல் ஆரோக்கியம் பெற வேண்டும்.
அவர் எப்போதும் போல தன்னுடைய பணிகளை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு எடியூரப்பா கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X