என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு - சிபிஐ விசாரிக்க பீகார் அரசு பரிந்துரை
Byமாலை மலர்4 Aug 2020 6:34 AM GMT (Updated: 4 Aug 2020 6:34 AM GMT)
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் தந்தை கேட்டுக் கொண்டதற்கிணங்க, சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க பீகார் அரசு பரிந்துரை செய்துள்ளது.
பாட்னா:
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில் அவரது தந்தை விரும்பினால் சி.பி.ஐ. விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் நேற்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக, நிதிஷ்குமார் கூறுகையில், அவருக்கு என்ன நேர்ந்தாலும் அது சரியல்ல. இது அரசியலும் அல்ல, பீகார் காவல்துறை தனது கடமையை நிறைவேற்றி வருகிறது. எங்கள் டிஜிபி அவர்களிடம் பேசுவார். பாட்னா காவல் கண்காணிப்பாளர் பினாய் திவாரி மும்பையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். பீகார் டிஜிபி அங்குள்ள அதிகாரிகளுடன் பேசுவார். அவருக்கு என்ன நடந்தது (பினாய் திவாரி) என்பது தெரியவில்லை. இதில் அரசியல் இல்லை.
இந்த வழக்கு பாட்னா காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிரா காவல்துறை, பீகார் காவல்துறையுடன் இணைந்து ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமாரை டெலிபோனில் தொடர்பு கொண்ட சுஷாந்த் சிங் தந்தை, இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தந்தை கேட்டுக் கொண்டதற்கிணங்க, சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க பீகார் அரசு பரிந்துரை செய்துள்ளது என ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X