search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சஞ்சய் ராவத்
    X
    சஞ்சய் ராவத்

    பிரதமர் மோடியை மக்கள் ராஜினாமா செய்ய சொல்வார்கள்: சஞ்சய் ராவத்

    வாழ்வாதார பிரச்சினையை தீர்க்காவிட்டால் பிரதமர் மோடியை மக்கள் ராஜினாமா செய்ய சொல்வார்கள் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறினார்.
    மும்பை :

    சிவசேனா கட்சி பத்திரிகையான சாம்னாவின் கட்டுரை பகுதியில் அந்த கட்சியை சேர்ந்த எம்.பி. சஞ்சய் ராவத் எழுதி இருப்பதாவது:-

    நாட்டில் கொரோனா பிரச்சினையால் 10 கோடி மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். 40 கோடி குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. சம்பளம் பெறும் நடுத்தர மக்கள் வேலையை இழந்து உள்ளனர்.

    தொழில் மற்றும் வர்த்தகம் ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளது. மக்கள் பொறுமைக்கு எல்லை உண்டு. கொரோனா மற்றும் பொருளாதார பிரச்சினையை தீர்க்க தவறியதால் இஸ்ரேல் மக்கள் அந்த நாட்டு பிரதமருக்கு எதிராக போராடி வருகிறார்கள். இந்தியாவிலும் அதே நிலை ஏற்படும். வாழ்வாதார பிரச்சினைகளை தீர்க்காவிட்டால் பிரதமர் மோடியிடம் மக்கள் ராஜினாமா கேட்பார்கள்.

    ரபேல் போர் விமானம் இந்தியா வந்தபோது, அதற்கு அளிக்கப்பட்ட வரவேற்பு வியப்பு அளிக்கிறது. இதற்கு முன்பு சுகாய், மிக் போர் விமானங்கள் வந்தபோது இதுபோன்ற கொண்டாட்டங்கள் இல்லை. அணுகுண்டு மற்றும் ஏவுகணையுடன் பறக்கும் ரபேல் போர் விமானம் வேலைவாய்ப்பின்மை மற்றும் பொருளாதார பிரச்சினைகளை அழித்து விடாது.

    ஒரு டோலா தங்கம் (10 கிராம்) 51 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

    இந்த சூழ்நிலையில் மராட்டியத்தில் பாரதீய ஜனதா சொந்த பலத்தில் ஆட்சியை பிடிக்கும் என்று அந்த கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா கூறியுள்ளார். பொருளாதார பிரச்சினை, வேலைவாய்ப்பு இன்மை போன்ற பிரச்சினைகளை பற்றி அவர்கள் பேசுவதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×