search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    ஒரே நாளில் 84 பேர் பலி: கர்நாடகத்தில் புதிதாக 5,532 பேருக்கு வைரஸ் தொற்று

    கர்நாடகத்தில் ஒரே நாளில் 84 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 2,500-ஐ தாண்டி உள்ளது. புதிதாக 5,532 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தினமும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரசால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கொரோனா பாதிப்பு இதுவரை 1 லட்சத்து 34 ஆயிரத்து 819 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 84 பேர் பலியாகியுள்ளனர். இதனால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 2,504 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகத்தில் நேற்றைய பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 1 லட்சத்து 29 ஆயிரத்து 287 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று புதிதாக 5,532 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கர்நாடகத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்து 819 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 84 பேர் பலியாகியுள்ளனர். இதனால் வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,504 ஆக அதிகரித்துள்ளது.

    புதிதாக கொரோனா பாதித்தோரில், பெங்களூரு நகரில் 2,105 பேர், பல்லாரியில் 377 பேர், கலபுரகியில் 238 பேர், மைசூருவில் 238 பேர், ராய்ச்சூரில் 212 பேர், உடுப்பியில் 182 பேர், தார்வாரில் 181 பேர், தாவணகெரேயில் 178 பேர், பெலகாவியில் 172 பேர், தட்சிண கன்னடாவில் 162 பேர், ஹாவேரியில் 146 பேர், ஹாசனில் 142 பேர், பீதரில் 135 பேர், பாகல்கோட்டையில் 131 பேர், விஜயாப்புராவில் 113 பேர், சிவமொக்காவில் 99 பேர், மண்டியாவில் 97 பேர், கதக்கில் 88 பேர், கொப்பலில் 87 பேர், ராமநகரில் 71 பேர், சிக்பள்ளாப்பூரில் 55 பேர், கோலாரில் 51 பேர், சித்ரதுர்காவில் 46 பேர், சிக்கமகளூருவில் 40 பேர், யாதகிரியில் 39 பேர், பெங்களூரு புறநகரில் 38 பேர், துமகூருவில் 35 பேர், சாம்ராஜ்நகரில் 31 பேர், உத்தரகன்னடாவில் 26 பேர், குடகில் 16 பேர் உள்ளனர்.

    கொரோனாவுக்கு பெங்களூருவில் 21 பேர், பல்லாரியில் 2 பேர், கலபுரகியில் 6 பேர், மைசூருவில் 10 பேர், ராய்ச்சூரில் 2 பேர், தார்வாரில் 8 பேர், தாவணகெரேயில் 3 பேர், பெலகாவியில் ஒருவர், தட்சிண கன்னடாவில் 10 பேர், ஹாசனில் 2 பேர், பாகல்கோட்டையில் 2 பேர், விஜயாப்புராவில் ஒருவர், சிவமொக்காவில் 4 பேர், மண்டியா, கதக்கில் தலா 3 பேர், கொப்பலில் 2 பேர், சிக்பள்ளாப்பூர், சிக்கமகளூருவில் தலா ஒருவர், சாம்ராஜ்நகரில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கர்நாடகத்தில் இதுவரை 57 ஆயிரத்து 725 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் நேற்று மட்டும் 4,077 பேர் அடங்குவர். 74 ஆயிரத்து 590 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 638 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 14 லட்சத்து 18 ஆயிரத்து 569 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனன. இதில் நேற்று மட்டும் 33 ஆயிரத்து 17 மாதிரிகள் அடங்கும்.

    Next Story
    ×