என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கல்வானில் வீர மரணம் அடைந்த வீரர்களின் பெயர்கள் தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்படுகிறது
Byமாலை மலர்30 July 2020 11:23 PM GMT (Updated: 30 July 2020 11:23 PM GMT)
கல்வானில் சீனர்களுடன் நடைபெற்ற மோதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் பெயர்கள் டெல்லி தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
இந்திய சீன எல்லையான லடாக்கின் கல்வான் பகுதியில் ஜூன் 15-ம் தேதி இருநாட்டு வீரர்கள் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்திய வீரர்கள் நடத்திய பதிலடி தாக்குதலில் சீன தரப்பிலும் 43 பேர் வரை உயிரிழந்தனர்.
இந்திய தரப்பில் பீகார் ராணுவ அதிகாரி பி சந்தோஷ் பாபுவும் வீரமரணம் அடைந்தார். கல்வானில் நடந்த மோதலின் போது சீனர்கள் கற்கள், ஆணிகள் பதிக்கப்பட்ட ராடுகளை கொண்டு நம் வீரர்களைத் தாக்கினர்.
இந்நிலையில், கல்வானில் சீனர்களுடன் நடைபெற்ற மோதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் பெயர்கள் டெல்லி தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், நம் நாட்டின் எல்லையைக் காக்கும் பொருட்டு நடந்த மோதலில் வீரமரணம் அடைந்த 20 வீரர்களின் பெயர்களும் டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்படும். இப்பணி சில மாதங்களில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X