search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்னல் தாக்கி பலி
    X
    மின்னல் தாக்கி பலி

    பீகாரில் மின்னல் தாக்கி 8 பேர் பலி - தலா ரூ.4 லட்சம் இழப்பீடு

    பீகாரில் கனமழை பெய்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இடி, மின்னலுக்கு 8 பேர் பலியாகினர்.
    பாட்னா:

    பீகார், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்த நிலையில் மின்னல் தாக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்களில் தலா 3 பேர் ஷேக்புரா மற்றும் ஜமுய் பகுதிகள், தலா ஒருவர் சிவான் மற்றும் பெகுசராய் பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர் என பேரிடர் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    மின்னல் தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதல் மந்திரி நிதிஷ் குமார் தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
    Next Story
    ×