என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரபேல் விமானம் இந்தியாவிற்கு மேலும் ஒரு பெருமை- பிரதமர் மோடி புகழாரம்
Byமாலை மலர்29 July 2020 12:04 PM GMT (Updated: 29 July 2020 12:04 PM GMT)
ரபேல் விமானம் இந்தியாவிற்கு மேலும் ஒரு பெருமை என பிரதமர் மோடி புகழாரம் சூட்டி உள்ளார்.
புதுடெல்லி:
பிரான்ஸில் இருந்து புறப்பட்ட 5 ரபேல் போர் விமானங்கள் இன்று மாலை 3 மணிக்கு அரியானாவின் அம்பாலா விமான படை தளத்தில் பாதுகாப்பாக தரை இறங்கின. அங்கு ரபேல் போர் விமானங்களுக்கு தண்ணீர் பீய்ச்சி அடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரபேல் விமானங்களை விமான படைத்தளபதி ராகேஷ் பதோரியா முறைப்படி வரவேற்றார்.
கேப்டன் ஹர்கிரத் சிங் தலைமையிலான இந்திய விமானிகள் ரபேல் விமானங்களை இயக்கி தாயகம் எடுத்து வந்தனர். ரபேல் ஒப்பந்தத்தை இறுதி செய்த ராகேஷ் பதோரியா பெயரின் முதல் எழுத்துக்களை கொண்டு ஆர்.பி 001 என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
1997 ஆம் ஆண்டு ரஷ்யாவின் சுகோய்-30 போர் விமானங்கள் இந்திய படையில் சேர்க்கப்பட்டன. 23 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய ராணுவ வரலாற்றில் மற்றொரு மைல்கல் நிகழ்வு ஆகும். தங்க அம்புகள் என்ற படை பிரிவில் புதிய ரபேல் விமானங்கள் இயங்க உள்ளன.
இந்நிலையில் ரபேல் விமானத்திற்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில், இந்தியாவிற்கு மேலும் ஒரு பெருமை என புகழாரம் சூட்டி உள்ளார்.
பிரான்ஸில் இருந்து புறப்பட்ட 5 ரபேல் போர் விமானங்கள் இன்று மாலை 3 மணிக்கு அரியானாவின் அம்பாலா விமான படை தளத்தில் பாதுகாப்பாக தரை இறங்கின. அங்கு ரபேல் போர் விமானங்களுக்கு தண்ணீர் பீய்ச்சி அடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரபேல் விமானங்களை விமான படைத்தளபதி ராகேஷ் பதோரியா முறைப்படி வரவேற்றார்.
கேப்டன் ஹர்கிரத் சிங் தலைமையிலான இந்திய விமானிகள் ரபேல் விமானங்களை இயக்கி தாயகம் எடுத்து வந்தனர். ரபேல் ஒப்பந்தத்தை இறுதி செய்த ராகேஷ் பதோரியா பெயரின் முதல் எழுத்துக்களை கொண்டு ஆர்.பி 001 என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
1997 ஆம் ஆண்டு ரஷ்யாவின் சுகோய்-30 போர் விமானங்கள் இந்திய படையில் சேர்க்கப்பட்டன. 23 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய ராணுவ வரலாற்றில் மற்றொரு மைல்கல் நிகழ்வு ஆகும். தங்க அம்புகள் என்ற படை பிரிவில் புதிய ரபேல் விமானங்கள் இயங்க உள்ளன.
இந்நிலையில் ரபேல் விமானத்திற்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில், இந்தியாவிற்கு மேலும் ஒரு பெருமை என புகழாரம் சூட்டி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X