search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடகத்தில் கொரோனாவுக்கு பலி
    X
    கர்நாடகத்தில் கொரோனாவுக்கு பலி

    கர்நாடகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 102 பேர் பலி: புதிதாக 5,536 பேருக்கு வைரஸ் தொற்று

    கர்நாடகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 102 பேர் பலியாகியுள்ளனர். புதிதாக 5,536 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் கொரோனா வேகமாக அதிகரித்து வருகிறது. தினசரி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கொரோனா தாக்கி வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 5,536 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 5 ஆயிரத்து 1 ஆக அதிகரித்துள்ளது. அதே போல் நேற்று ஒரே நாளில் வைரஸ் தொற்றுக்கு 102 பேர் பலியாகியுள்ளனர்.

    இதனால் பலியானோரின் எண்ணிக்கை 2,055 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆயினும் வைரஸ் தொற்று பரவல் என்பது கட்டுக்குள் வரவில்லை. மாறாக அது வேகமாக அதிகரித்து வருகிறது. கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 99 ஆயிரத்து 465 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று புதிதாக 5,536 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 5 ஆயிரத்து 1 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு நேற்று 102 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் வைரஸ் தொற்றுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 2,055 ஆக உயர்ந்துள்ளது.

    புதிதாக கொரோனா பாதித்தோரில் பெங்களூரு நகரில் 1,898 பேர், பல்லாரியில் 452 பேர், கலபுரகியில் 283 பேர், மைசூருவில் 220 பேர், துமகூருவில் 207 பேர், கோலாரில் 174 பேர், தட்சிண கன்னடாவில் 173 பேர், தார்வாரில் 173 பேர், விஜயாப்புராவில் 153 பேர், கொப்பலில் 144 பேர், தாவணகெரேயில் 135 பேர், பாகல்கோட்டையில் 115 பேர், உடுப்பியில் 109 பேர், ஹாசனில் 108 பேர், பெங்களூரு புறநகரில் 107 பேர், ராமநகரில் 101 பேர், மண்டியாவில் 96 பேர், ராய்ச்சூரில் 93 பேர், கதக்கில் 73 பேர், சிக்பள்ளாப்பூரில் 72 பேர், யாதகிரியில் 67 பேர், சித்ரதுர்காவில் 66 பேர், சிக்கமகளூருவில் 55 பேர், சிவமொக்காவில் 54 பேர், சாம்ராஜ்நகரில் 52 பேர், உத்தரகன்னடாவில் 47 பேர், ஹாவேரியில் 40 பேர், பீதரில் 39 பேர், குடகில் 2 பேர் உள்ளனர்.

    கர்நாடகத்தில் கொரோனாவுக்கு பெங்களூருவில் 40 பேர், கலபுரகி, பெலகாவியில் தலா 6 பேர், மைசூருவில் 8 பேர், துமகூரு, கோலார், விஜயாப்புரா, கொப்பல், ராய்ச்சூர், சிக்கமகளூரு, உத்தரகன்னடா, குடகில் தலா ஒருவர், தட்சிண கன்னடாவில் 3 பேர், தார்வாரில் 6 பேர், தாவணகெரேயில் 4 பேர், பாகல்கோட்டையில் 2 பேர், உடுப்பியில் 7 பேர், ஹாசனில் 5 பேர், கதக்கில் 2 பேர், சிக்பள்ளாப்பூரில் 3 பேர், பீதரில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 12 லட்சத்து 42 ஆயிரத்து 771 மாதிரிகள் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளன.

    இதில் நேற்று மட்டும் 37 ஆயிரத்து 720 மாதிரிகள் அடங்கும். மாநிலத்தில் இதுவரை 40 ஆயிரத்து 504 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் நேற்று மட்டும் 2,819 பேர் அடங்குவர். 64 ஆயிரத்து 434 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 612 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    Next Story
    ×