என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பீகாரில் கொரோனாவால் உயிரிழந்தோரின் உடல்களை எரிக்க எதிர்ப்பு
Byமாலை மலர்28 July 2020 6:26 AM GMT (Updated: 28 July 2020 6:26 AM GMT)
பீகாரில் கொரோனாவால் உயிரிழந்தோரின் உடல்களை எரிக்க எதிர்ப்பு தெரிவித்த 26 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பாட்னா:
பீகார் தலைநகர் பாட்னாவில் பான்ஸ்காட் என்ற கிராமத்தில் சுடுகாடு ஒன்று உள்ளது. அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா வைரசால் இறந்தவர்களின் உடல்கள் இந்த சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு அந்த கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த சுடுகாட்டில் கொரோனாவால் உயிரிழந்த ஒருவரின் உடல் வழக்கம் போல் தகனம் செய்யப்பட்டது. அப்போது அந்த கிராம மக்கள் அங்கு திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊரடங்கு உத்தரவை மீறியும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் கிராம மக்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக 26 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொற்றுநோய்கள் சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பீகார் தலைநகர் பாட்னாவில் பான்ஸ்காட் என்ற கிராமத்தில் சுடுகாடு ஒன்று உள்ளது. அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா வைரசால் இறந்தவர்களின் உடல்கள் இந்த சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு அந்த கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த சுடுகாட்டில் கொரோனாவால் உயிரிழந்த ஒருவரின் உடல் வழக்கம் போல் தகனம் செய்யப்பட்டது. அப்போது அந்த கிராம மக்கள் அங்கு திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊரடங்கு உத்தரவை மீறியும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் கிராம மக்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக 26 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொற்றுநோய்கள் சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X