என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆக்கிரமிப்புக்கு துணைபோவது தேசவிரோதம் -சீன விவகாரத்தில் மத்திய அரசு மீது ராகுல் பாய்ச்சல்
Byமாலை மலர்27 July 2020 10:43 AM GMT (Updated: 27 July 2020 10:43 AM GMT)
இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளது என்றும் ஆக்கிரமிப்புக்கு துணைபோவது தேசவிரோதம் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி:
சீனாவுடனான எல்லை மோதல் தொடர்பாகவும், இந்த விஷயத்தில் மத்திய அரசின் அணுகுமுறையை விமர்சித்தும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டரில் தனது கருத்தை பதிவிட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளது. இந்த உண்மையை மறைத்து, ஆக்கிரமிப்புக்கு துணைபோவது தேசவிரோதம். இந்த விவகாரத்தை மக்களின் கவனத்திற்கு கொண்டு வருவது தேசபக்தி.
நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதே ஓர் இந்தியனாக தலையாய பணி. நமது மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளது தெளிவாக தெரிகிறது. இது தொடர்பாக செயற்கைக்கோள் புகைப்படங்களை பார்த்த பிறகும் முன்னாள் ராணுவ வீரர்களிடம் பேசிய பிறகும் நமது மண்ணை சீனா ஆக்கிரமிக்கவில்லை என எப்படி பொய் கூற முடியும்? இந்த விவகாரத்தில் தொடர்ந்து உண்மைகளை உரத்த குரலில் பேசுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X