என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
’ஆகஸ்ட் 5 வரை தினமும் 5 முறை அனுமன் மந்திரம் கூறுங்கள் கொரோனா ஒழிந்து விடும்’ - பாஜக எம்.பி. டுவிட்
Byமாலை மலர்26 July 2020 10:50 AM GMT (Updated: 26 July 2020 10:50 AM GMT)
மக்கள் அனைவரும் ஆகஸ்ட் 5 வரை தினமும் 5 முறை அனுமன் மந்திரம் கூறினால் கொரோனா வைரஸ் ஒழிந்து விடும் என பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாகூர் கருத்து தெரிவித்துள்ளார்.
போபால்:
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 13 லட்சத்து 85 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் நாடு முழுவதும் இதுவரை 32 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 8 லட்சத்து 85 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிக்கிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொடிய வைரசுக்கு தற்போதுவரை தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சிகள் இறுதி கட்டத்தை எட்டிவருகிறது. மேலும், கொரோனா தொடர்ந்து பரவாமல் இருக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப்பணி தொடங்கும் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை தினமும் 5 முறை அனைவரும் அனுமன் மந்திரம் கூறினால் கொரோனா வைரஸ் ஒழிந்துவிடும் என சர்ச்சைகளுக்கு பெயர் போன மத்தியபிரதேச மாநிலம் போபால் தொகுதி பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாகூர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ’’நாம் அனைவரும் இணைந்து கொரோனா வைரஸ் ஒழியவும், மக்கள் நலமுடன் இருக்கவும் ஆன்மீக வழியில் முயற்சிகளை மேற்கொள்ளோம். ஜூலை 25 முதல் ஆகஸ்5 வரை உங்கள் வீடுகளில் தினமும் 5 முறை அனுமன் மந்திரத்தை கூறுகள். இந்த பூஜையின் முடிவில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி கடவுள் ராமருக்கு வீட்டில் விளக்கேற்றி வழிபடுங்கள்.
ஊரடங்கு ஆகஸ்ட் 4 ஆம் தேதி (மத்தியபிரதேசம்) முடிவடைந்தாலும் அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி இந்த பூஜை நிறைவடையும். இதை நாம் தீபாவளி போன்று கொண்டாட வேண்டும்.
மக்கள் அனைவரும்... நாடு முழுவதும் உள்ள இந்துக்கள் ஒன்றாக அனுமன் மந்திரத்தை கூறும்போது அது நிச்சயம் வேலை செய்யும். நாம் கொரோனா வைரசில் இருந்து விடுபட்டுவிடுவோம்.. இது கடவுள் ராமருக்கான உங்கள் பிராத்தனை’’ என தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X