search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனை
    X
    பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனை

    பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா நோயாளி தற்கொலை

    பீகாரில் கொரோனா நோயாளி ஒருவர், திடீரென மருத்துவமனையின் 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    பாட்னா:

    நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், கொரோனா குறித்து நோயாளிகளிடையே பயம் அதிகரித்துள்ளது. உறவுகள் யாரையும் பார்க்க முடியாமல் தனிமை வார்டில் சிகிச்சை பெறுவதால் மன உளைச்சலால் பாதிக்கப்படுகின்றனர். சிலர் தற்கொலை செய்யும் அளவுக்கும் போய்விடுகின்றனர். 

    இந்நிலையில், பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர் இன்று திடீரென தற்கொலை செய்துகொண்டார். மருத்துவமனை கட்டிடத்தின் 5வது தளத்தில் இருந்து குதித்து அவர் இறந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மருத்துவமனையில் கொரோனா நோயாளி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×