என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எந்த ஊழியர்களும் பணி நீக்கம் செய்யப்படமாட்டார்கள் - ஏர் இந்தியா
Byமாலை மலர்23 July 2020 8:56 PM GMT (Updated: 23 July 2020 8:56 PM GMT)
பிற விமான நிறுவனங்கள் போன்று தங்கள் ஊழியர்கள் யாரும் பணி நீக்கம் செய்யப்படமாட்டார்கள் ஏர் இந்தியா விளக்கம் அளித்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு பயணிகள் விமான சேவை மிகமிகக்குறைவான எண்ணிக்கையில் செயல்பட்டு வருகிறது. ஆனால் பெரும்பாலான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.
இந்த நஷ்டத்தால் செலவை குறைக்கும் நடவடிக்கைகளில் விமான நிறுவனங்கள் இறங்கியுள்ளது. இதனால் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான இண்டிகோ தனது 10 சதவிகித ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
இந்நிலையில், கொரோனா காரணமாக மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனமும் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.
அந்நிறுவனம் செலவை குறைக்கும் நடவடிக்கையாக ஊழியர்களின் மாதாந்திர படிகளை குறைத்து உள்ளது.
அதன்படி அனைத்து பொது வகை அதிகாரிகளுக்கும் 50 சதவீதம் வரையும், பொது வகை ஊழியர்கள் மற்றும் ஆப்ரேட்டர்களுக்கு 30 சதவீதம் வரையும் படிகள் குறைக்கப்பட்டு உள்ளன.
இதற்கிடையில், ஏர் இந்தியா மண்டல தலைமை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில் ஊழியர்களின் செயல்திறன் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அறிக்கையாக தாக்கல் செய்ய கேட்டுக்கொண்டது.
இதனால் தனியார் நிறுவனங்களில் நடைபெற்ற பணி நீக்கம் போன்று ஏர் இந்தியாவிலும் ஊழியர்கள் பலர் பணி நீக்கம் செய்யப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டது.
இந்நிலையில், பிற விமான நிறுவனங்களை போன்று ஏர் இந்தியா தனது ஊழியர்கள் யாரையும் பணி நீக்கம் செய்யாது என அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இதனால் ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X